மனைவி
பருவத்தில் விதைத்த ஆசைகள் பயிராகி விளைந்து நிற்கையில் உருவத்தில் உள்ள ஆசையை உருத்தெரியாமல் சிதைத்தவள் காட்சிப் பிழையில் கழிந்த இரவுகளை காதலை சாட்சியாக்கி மாற்றினாள் வாலிபத்து வயசுக் கோளாறுக்கு மருந்தாய் வந்தென்னைத் தேற்றினாள் காத்திருந்த காதல் சுகம் கனிந்தது அவள் வார்த்தையால் ஆனால் ஏக்கம் இன்னும் தொடருது அவளுடன் வாழும் நேரம் எதிர்ப் பார்ப்பதால்