இசையும் இசையே
துளை போட்ட குழலும் மெல்லிசை தந்து போகும் கனமான மனதின் பெரும் ரணம் தீர்த்து போகும் பறையோடு பாடல் நம் பண்பாட்டுத் தேடல் துளைத் தோளின் கூடல் இது கலைத் தாயின் ஊடல். குயிலின் குரலும் கடலின் அலையும் அழகிய இசையின் அழியா தடமே. இமைக்குள் விழி போல் மொழிக்குள் இனிதாய் கவிக்குள் பெரிதாய் கானம் கலந்திட இசையாகும் நாளும் களித்திட துணையாகும்.