Posts

Showing posts from June, 2023

கண்டாலே கூறிடுவேன் இறைவனவன் எவனென்று

பரந்த உலகம்  விரிந்து கிடக்குதே, விழுந்த விதையை பயிர் செய்வோம், ஆனந்த கண்ணீர் துளியில் அழகிய நந்த வனமமைப்போமே ! மரஞ்செடி கொடியோ ! மனமயக்கும் மலர் வனமோ ! மூலிகை தாவரமோ ! உணவு வகை தானியமோ ! ருசியாலே பசி தீர்க்கும் , மருந்தாகி வாழவைக்கும். மலராகி போவதிலே, இறைவனுக்கும், இறுதிக்கும், இப்பிறப்பை அர்ப்பணிக்கும். எத்தனை அழகு , இது யார் செய்த உலகு ! ஆயுளை அளித்தும், அழித்துமதில் விளையாடும், ஆற்றல் உடையவன் எவனோ, அழியும் உலகில்  நடக்கும் நிகழ்விதை, நித்தம் அழிவறியா ரசிப்பவனை  காணத் தான் வழியுமுன்டோ ? கண்டாலே கூறிடுவேன்  இறைவனவன் என்னென்று.