கண்டாலே கூறிடுவேன் இறைவனவன் எவனென்று
பரந்த உலகம்
விரிந்து கிடக்குதே,
விழுந்த விதையை
பயிர் செய்வோம்,
ஆனந்த கண்ணீர் துளியில்
அழகிய நந்த வனமமைப்போமே !
மரஞ்செடி கொடியோ !
மனமயக்கும் மலர் வனமோ !
மூலிகை தாவரமோ !
உணவு வகை தானியமோ !
ருசியாலே பசி தீர்க்கும் ,
மருந்தாகி வாழவைக்கும்.
மலராகி போவதிலே,
இறைவனுக்கும், இறுதிக்கும்,
இப்பிறப்பை அர்ப்பணிக்கும்.
எத்தனை அழகு ,
இது யார் செய்த உலகு !
ஆயுளை அளித்தும்,
அழித்துமதில் விளையாடும்,
ஆற்றல் உடையவன் எவனோ,
அழியும் உலகில்
நடக்கும் நிகழ்விதை,
நித்தம் அழிவறியா ரசிப்பவனை
காணத் தான் வழியுமுன்டோ ?
கண்டாலே கூறிடுவேன்
இறைவனவன் என்னென்று.
Comments