' இழப்பின் பின் உழைப்பு '
காடு கழனி முதல் நாடு நகரம் எல்லாம் நரகம் ஆகிப் போச்சு . மாறும் காலமிதில் மானம் மறைத்திடவே ஞாலம் உணர்த்திப் போச்சு . நாளும் உழைத்து தினம் வாழும் உறவுகளின் வாழ்க்கை தொலைந்து போச்சு . அறுத்து விழும் அருவி அடித்து செல்லாறு அழியாத வளம் நூறு . மறந்தோம் அக நா நூறு கடந்தோம் புற நா நூறு ஆட்சி அமைக்க போதும் ஐநூறு . பிளவு பட்ட நாம் இழவு கடந்தெழுந்தால் உழவே உயிர் மூச்சு .