' இழப்பின் பின் உழைப்பு '

காடு கழனி முதல்
நாடு நகரம் எல்லாம்
நரகம் ஆகிப் போச்சு .

மாறும் காலமிதில்
மானம் மறைத்திடவே
ஞாலம் உணர்த்திப் போச்சு .

நாளும் உழைத்து தினம்
வாழும் உறவுகளின்
வாழ்க்கை தொலைந்து போச்சு .

அறுத்து விழும் அருவி
அடித்து செல்லாறு
அழியாத வளம் நூறு .

மறந்தோம் அக நா நூறு
கடந்தோம் புற நா நூறு
ஆட்சி அமைக்க போதும் ஐநூறு .

பிளவு பட்ட நாம்
இழவு கடந்தெழுந்தால்
உழவே உயிர் மூச்சு.



Comments

Boomi Geevan said…
சிறப்பு நண்பர்

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

' முற்காலம், இக்காலம், எக்காலம் நற்காலம் '

இதயம்

மனைவி

ஒழுக்கம்

சாதி...

பிள்ளை