வாழ்க்கை
இனி ஒரு பிறவி எதற்காக இத்துனை இன்பங்கள் இங்கிருக்க அத்தனை உயிரும் பயணிக்கும் வாழ்க்கை எனும் அழகிய சுற்றுலாவில். பசியோ, பணமோ, மனமோ விதியோ, சதியோ, ரணமோ பிணமாகும் வரை தான் வாழ்ந்திடுவோம் - புதிரான வாழ்வில் தற்கொலை தவிர்த்து ரசித்திடுவோம். நம்பிக்கை அற்றார்க்கு இரு கை கால்களே உற்ற பெரும் உயர்வாகும் கை, கால்கள் அற்றவர்க்கு நம்பிக்கை மட்டும் தான் மற்ற பிறவற்றிலெல்லாம் பெற்ற பெரும் வரமாகும் இருகை இருக்கையும் செய்கை கொள்கையும் சேர்க்கை செயற்கையும் இயற்கை என இன்னபிற பல கைகளையும் இவ் வாழ்க்கை தான்வடி வமைக்குதடா.