Posts

Showing posts from August, 2024

இப்படி நடந்தால் எப்படி இருக்கும்

ஊரின் பேரிருக்கும் ஆனால் ஊரிருக்காது வயிற்றில் பசி இருந்தாலும் சோறுமிருக்காது  நா வறண்டு போனலும் நனைக்க நீருமிருக்காது உயிர் இருக்கும்  உயிர் வளி இருக்குமா பூமி இருக்கும்  நாம் எங்கு இருப்போம் நடந்து செல்லும் கால்கள்  நாளை பறந்து செல்ல நேரிடுமா எத்தனையோ தொழில் செய்கிறோம் எதில் தான் பொய்யில்லை உழவை தவிர உயர் தொழிலில்லை  உயிருக்கிதைவிட உயர்வேதுமில்லை இன்று கானகத்தில் வீடு கட்டி காலத்தை கழிக்கிறோம்  நாளை வீட்டின் மாடியிலேயே  விவசாயம் செய்வோமோ சேர்க்கை இல்லாமலே  செயற்கை கரு உருவாகிறது இனி கருவுக்கு பதிலாக  கருவி உருவாகிடுமோ தாலி கட்டி கொள்ளாமல் கல்யாணம் செய்யாமல்  காலம் மாறி போகிவிட்டால் காமம் காணமல் போகிடுமோ அறிவியல் கூட  ஆணின்றி கரு சுமக்க பெண்ணுக்கு உதவிடுமோ அறிந்து கொள்வோம்  ஆணாக இருப்பதற்கே நாளை அறிவியலே  துணை ஆகிவிட்டால்... அடக்கி ஆண்டு அடிமை படுத்தாதே திருத்திக் கொள் புனிதா திருந்தாத மனிதா மனிதனெனும் படைப்புமினி தொழிலாக மாறிவிட்டால் அக்காலம் எப்படியோ... இப்படியாய் வெடிக்கிறது  துடிக்கிற என் இதயமிங்கு. என்று எங்கு...

வேற்றுமையில் ஒற்றுமை

வெற்றுச் சாலையில்  சிலர் வேகமாய் ஓடினர் கையில் சிறு குச்சியுடன் வேகமாய் ஓட்டினர். வடிவத்தில் வேறானாலும் ஒற்றுமையின் இலக்கணத்தை  சீரான வேகத்தில்  சுழன்றோடிய விதத்தில்  ரோதை எனும் சக்கரத்தால் பாதை போகும் போதிலே சொல்லாமல் சொன்னார்கள்  மொழி  உயர  நிற  நாடோடு உடலாலும் பிரிந்தோற்கும் புரியும்படி.. தன் மேலேறி தனை உதைத்து தானும் கீழே விழுந்தாலும் தாங்கி பிடித்தும் தட்டி கொடுத்தும் பாசம் தருவாள் தாயைப் போலப்  புவியன்னை என...