Posts

Showing posts from March, 2018

' தமிழ் நமது அடையாளம் '

கிரகம் புடிச்ச உங்களுக்கு கரகம் சொல்லித்தரும் பாடமடா தப்பா நினைக்கும் மக்கள் முன்னே தப்பாட்டம் தரும் வேகமடா பாரதத் தமிழ் நாட்டுக்குள்ள பரதத்தின் புகழ் ஜதி சலங்கைக்குள்ள இசையை தருமந்த ஏழு சுவரம் இசைத்திட இனிமை தரும் நாத சுவரம் தப்பை தட்டிக் கேட்கும் நீதிக்கு  ரௌத்திரம் எங்கும் பொங்கி ஓடும்  கழுத்து கேட்கும் தாலி நெற்றி கேட்கும் திலக வேலி.  உதிரம் சிந்தும் உழவனுக்கும்  உயர் மரியாதை செய்ய பொங்கல் பொங்கும் கவி கம்பன் பாரதி தந்த தமிழ் பாரதிதசனில் புரட்சிகள்செய்த தமிழ் தமிழுக்கு ழகரம் சிகரம் போல உயிருக்கு தமிழ் என்றும் உதிரம்போல கண்ணதாசனில் கரைந்து வளர்ந்த தமிழ் என்றும் எங்களின் அடையாளமான  மானத் தமிழ். 

வேசி தொழிலல்ல வேதனை '

சைகையால கூப்பிட்டு  ஆசைகளை போக்கிட்டு , கால கொடுமையால காசும் கொஞ்சம் சேத்துகிட்டு  , காலப் போக்கில் போய்கிட்டு கால் வயித்துக்கு சாப்பிட்டு  , வாழ்வின் வலி பொறுக்காம  வலி பொறுக்கும் காமம் தேடியே  , காலம் தந்த கறைகளை கடந்து வாழ வேண்டியே  , குடும்பத்துக்கு கடன் பட்டு துன்பத்துக்கும் உடன்பட்டு , கவர்ச்சி உடை காட்டி - மன சாட்சிக்கு கொள்ளியிட்டு , இந்நிலை தந்த சூழலுக்கும் தன் வாழ்வை தியாகம் செய்தால்  தாசி என்பார் உலகிலே, நாதியற்ற அவள் வாழ்வை  யாரறிவார் உளத்திலே  ........

' பாவமா சாபமா பைதியமாக்குமா '

பெத்துப்புட்டு மறந்துப்புட்டு  தவிக்கவிட்டு பிரிஞ்சிப்புட்டு  துடிக்கவிட்டு அழுகவிட்டு வெறுத்த  வாழ்வும் துறத்திகிட்டு வறுத்தப்பட்டே  ஓடிகிட்டு   வாழ்க்கை அத தேடிகிட்டு வலியை மட்டும் சுமந்துகிட்டு காலனுக்கு காத்துகிட்டு காசு சேர்க்க கத்துகிட்டு உடலை விட்டு  உசுரு போக சமமாகிறோமே மண்ணை தொட்டு பிறப்பு  பாவமா அதில் பிரிவு சாபமா இந்த  மாய உலகம் நம்மை பைத்தியமாக்குமா ?

' ஆட்டிப்படைப்பவை அழிவை அடையும் '

உழவின் இழவு , உயருது வறுமையின் அளவு  , உடுத்தும் உடையின் விலையோ மலிவு  , உயிர்கள் அதர்கென உழைத்தே அழிவு . நில்லா வாழ்வில்  , இல்லா இயற்கை  , பொல்லா நோய் வர  , வழி வகுப்பது செயற்கை  . நாட்டு வைத்தியம்  நாம் மறந்திட்டோம்  , நாடும் ஆங்கில மருந்தோ  நமை கொல்ல தீட்டுது திட்டம் . களவு, காமம்  , காசின் மோகம்  , ஆடம்பரம் தேடும்  , ஆறடி தேகம் .