' ஆட்டிப்படைப்பவை அழிவை அடையும் '

உழவின் இழவு ,
உயருது வறுமையின் அளவு ,
உடுத்தும் உடையின் விலையோ மலிவு ,
உயிர்கள் அதர்கென உழைத்தே அழிவு .

நில்லா வாழ்வில் ,
இல்லா இயற்கை ,
பொல்லா நோய் வர ,
வழி வகுப்பது செயற்கை .

நாட்டு வைத்தியம் 
நாம் மறந்திட்டோம் ,
நாடும் ஆங்கில மருந்தோ 
நமை கொல்ல தீட்டுது திட்டம் .

களவு, காமம் ,
காசின் மோகம் ,
ஆடம்பரம் தேடும் ,
ஆறடி தேகம் .

Comments

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

வேற்றுமையில் ஒற்றுமை

வேர்கடலை

முருகா

செம்மொழித் தமிழ்

நண்பகல்

மதுவே உயிரே