வேசி தொழிலல்ல வேதனை '

சைகையால கூப்பிட்டு 
ஆசைகளை போக்கிட்டு ,

கால கொடுமையால
காசும் கொஞ்சம் சேத்துகிட்டு ,

காலப் போக்கில் போய்கிட்டு
கால் வயித்துக்கு சாப்பிட்டு ,

வாழ்வின் வலி பொறுக்காம 
வலி பொறுக்கும் காமம் தேடியே ,

காலம் தந்த கறைகளை
கடந்து வாழ வேண்டியே ,

குடும்பத்துக்கு கடன் பட்டு
துன்பத்துக்கும் உடன்பட்டு ,

கவர்ச்சி உடை காட்டி - மன
சாட்சிக்கு கொள்ளியிட்டு ,

இந்நிலை தந்த சூழலுக்கும்
தன் வாழ்வை தியாகம் செய்தால் 

தாசி என்பார் உலகிலே,
நாதியற்ற அவள் வாழ்வை 
யாரறிவார் உளத்திலே ........

Comments

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

வேற்றுமையில் ஒற்றுமை

வேர்கடலை

முருகா

செம்மொழித் தமிழ்

நண்பகல்

மதுவே உயிரே