வேசி தொழிலல்ல வேதனை '

சைகையால கூப்பிட்டு 
ஆசைகளை போக்கிட்டு ,

கால கொடுமையால
காசும் கொஞ்சம் சேத்துகிட்டு ,

காலப் போக்கில் போய்கிட்டு
கால் வயித்துக்கு சாப்பிட்டு ,

வாழ்வின் வலி பொறுக்காம 
வலி பொறுக்கும் காமம் தேடியே ,

காலம் தந்த கறைகளை
கடந்து வாழ வேண்டியே ,

குடும்பத்துக்கு கடன் பட்டு
துன்பத்துக்கும் உடன்பட்டு ,

கவர்ச்சி உடை காட்டி - மன
சாட்சிக்கு கொள்ளியிட்டு ,

இந்நிலை தந்த சூழலுக்கும்
தன் வாழ்வை தியாகம் செய்தால் 

தாசி என்பார் உலகிலே,
நாதியற்ற அவள் வாழ்வை 
யாரறிவார் உளத்திலே ........

Comments

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

' முற்காலம், இக்காலம், எக்காலம் நற்காலம் '

இதயம்

மனைவி

ஒழுக்கம்

சாதி...

பிள்ளை