நிறமும் நிலவும்
மனதில் கரியமுடை மனிதர்கள் மகிழ்வுதரும் இனிமை இரவாகிடில், மனம் நிறம் பார்த்திடுமா நிறமென்பது நிலையல்ல நிறம் இங்கே நிறந்தரமல்ல. தோலின் நிறமது பிரிவின் வரவா, தொற்றாய் தோன்றிய பிறப்பின் உறவா ? நிலவின் மொழியில் நான் அழகா எனை அழகாக்க்கும் இவ்விருள் அழகா ? சாதி மதமதன் சான்றுளதா ? வீதிச் சண்டைகளில் தானதன் தீர்வுளதா ? இருளோடும் வெண்மை ஈகையின் நிலையா ? அளவடங்கா அவனியில் ஈகை நிலைக்க அழிவும் வழித்துணையா ! ஏற்றம் இறக்கம் மதியின் விதியே , எல்லாம் எனதெனும் எண்ணம் நமக்கு நாமே செய்யும் சதியே நிலவை நினைத்து உவகை அடைவாய் , நன்கு உணர்ந்தால் ஞாலம் அடைவாய் .