நிறமும் நிலவும்
மனதில் கரியமுடை மனிதர்கள்
மகிழ்வுதரும் இனிமை இரவாகிடில்,
மனம் நிறம் பார்த்திடுமா
நிறமென்பது நிலையல்ல
நிறம் இங்கே நிறந்தரமல்ல.
தோலின் நிறமது பிரிவின் வரவா,
தொற்றாய் தோன்றிய பிறப்பின் உறவா ?
நிலவின் மொழியில்
நான் அழகா
எனை அழகாக்க்கும்
இவ்விருள் அழகா ?
சாதி மதமதன் சான்றுளதா ?
வீதிச் சண்டைகளில் தானதன் தீர்வுளதா ?
இருளோடும் வெண்மை ஈகையின்
நிலையா ?
அளவடங்கா அவனியில்
ஈகை நிலைக்க
அழிவும் வழித்துணையா !
ஏற்றம் இறக்கம் மதியின் விதியே ,
எல்லாம் எனதெனும் எண்ணம்
நமக்கு நாமே செய்யும் சதியே
நிலவை நினைத்து
உவகை அடைவாய் ,
நன்கு உணர்ந்தால்
ஞாலம் அடைவாய் .
Comments