Posts

Showing posts from July, 2022

இது தான் இயற்கை

அங்கங்கே அழகான  வான்முகில் கூட்டம் அதை கண்டு ஆடுகிற  அழகு மயிலாட்டம் வீசாதோ என்றந்த  தென்றல் மேல் நாட்டம் அதிர்வுகளால் ஆடாத குளமோ அழகாக வின் பிம்பங்காட்டும் விழுதோ வேரோ  எதுவென தெரியாதிருக்கும் பலர் அதன் நிழலில் நிற்கும் போதே அதற்கும் மதிப்பிருக்கும் தேயாத நிலவெனில் நினைக்காமல் இருந்திருப்போம் முழு இரவும் முழு நிலவும் ஆனதனால் மனதோடு மயக்கந் தரும் சாலையில் காலடி  எடுத்து வைக்கிறோம் இருந்தும் அங்கே  நகர்வது தரைபோல் பிம்பம் நீரில் நாமும் பார்க்கிறோம் அருகில் பார்த்தால் அது அங்கில்லை. இது தான் இயற்கை.

மாறுவோம்

எல்லோரும் இங்கெல்லாமுமாக நினைக்கிறோம் ஆனால் நாம் அதற்காகவா  பிறக்கிறோம் இல்லாரோடிவ் வுலகில் தான் வாழ்கிறோம் இருப்பதை இறைக்க எங்கு நினைக்கிறோம் மீதத்தை வீதம் பிரித்து மறைத்து சேர்க்க பார்க்கிறோம் பஞ்ச பூதத்தை நாம் மறந்து  பாவத்தை செய்கிறோம் நெஞ்சத்திற் கழுக்கை தந்து புழுவாக ஆகிறோம் ஆனால் அதற்கு மாறாக மண்ணிற்கும் பயனன்றி வாழ்கிறோம்.  மாற்றான் மன உறுதி கண்டு  நம் மன நிம்மதி இழக்கிறோம் அவன் குருதி சிந்தும் வேளையில்  ஈகை மறந்து இன்முகத்தோடு இருக்க நினைக்கிறோம் இப்படியே இருந்து இருந்து  இழந்து தொலைக்கும் வாழ்க்கையில் அன்பு நெறி இன்பமுகம் ஒழுகி தினம்  ஒழுக்கத்தோடு வாழுவோம்.

நாளைய சமூகம்

தற்கொலைகள் தடுக்க மாடியில்லா கட்டிடம் மறைவில்லா வகுப்பறை வலையமற்ற மேற்கூறை வகுப்பறையை சுற்றி சுற்றி  பெற்றோர்க்கு வசிப்பிடம் தன்னம்பிக்கை வளர்க்க  இறைவனை மட்டும் நம்பிவிடு பாடம் மட்டும் பயனில்லை பயன் படுத்தும்  அறிவை அறிந்துப் பாடமெடு ஆண்டவன் வரலாற்றையும் அகற்றிவிடு அரசியலால் ஆண்டவனின் வரலாற்றையும் அழித்துவிடு.  அவசியமானது அறிவு அதை அறிந்திட தானிந்த படிப்பு முன்னுரிமை பெறவே தேர்ச்சி அது முட்டாள் என்பதற்காகாது சாட்சி காலத்தில் இந்நிலையில்  குழந்தையை தன்னிடத்தில் பொறுப்பாய் பார்த்து கொள்ளாதார் பெற்றோர் என்பதற்கே பொருள் சேர்க்காதார். நானுட்பட எல்லோரும் நல்லோராகி  நற்சமூகத்தை உருவாக்கிடுவோம்