Posts

Showing posts from May, 2023

எங்கே போகுதோ வாழ்க்கை

என்னடா வாழ்க்கை இது?  எண்ணிப் பார்க்கும்போது அது  சித்திரமா, விசித்திரம் போல் நெஞ்சுக்குள்ள நிற்கிறது பல வண்ணங்களால் தீட்டப்பட்ட ஓவியமோ இல்லை உறவுகளால் ஒன்றிணைந்த காவியமோ சிலை வடித்திடும் சிற்பி உளியாகிடுமோ சிதைத்து விட்டு செத்தவுடன் வித்தாக்கி போகிடுமோ கடமையில் உடைமை  உரிமையில் மடமை  வளமை தருமந்த வலிமை  அதில் எளிமை தானே இந்த இனிமை தனிமை எனும் வரம்  வரும் வரை வளமதை மனமது பெரிதென  மதியினில் விதைத்திடும். உதயத்தி லிருந்திடும் சூரியன் மறைவினில் எங்கோ போகிறது அதுபோல் தெளியா மனமும் திரிந்தலைந்து‌ நிலையெது என்பதை நினைத்து வாழ்வை வாழ்ந்து முடித்து மடந்திட செய்கிறதே.

' மண் புழுவின் நண்பனுக்கு ' ' மண்ணுல பல தொல்ல '

வாடுது உசுறு நிலத்துலையும்  உழவனுருவில் நிசத்துலயும் கேடு நோக்கி ஓடும் இந்த பாரில் உள்ள நாடும் அன்று விவசாயம் அரசாங்கத் தொழிலாக மாறும்  அந்த காலம் வெகு தூரம் இல்லை  அதை எண்ணி உழைப்போமே நாளும். ஆணுக்கும் பெண்ணுக்கும் தானே கல்யாணம் அத விட்டு சொத்துதனை தேடுகிறான் நாளும் நில மழிஞ்சு நாடாகும் அந்த ஒரு காலம் அது விளைநிலத்தின் சுடுகாட்டில் நாம் வாழம் அலங்கோலம். விளை நிலத்தை விலை நிலமாக்க  திட்டம் போடுறீங்க மரங்செடி கொடியாக விதையால வெளிவருங் செயலுக்கு  உழவெனும் பெயர மறந்து போகுறீங்க உழவனை உதரித் தள்ளுறீங்க வடிகாலும் வடிநீர் பாசனத்தையும் - அமைக்க  இங்க யாரு முன் வரீங்க. ஏர் டிராக்டரான பின்னும் ஏற்றமிங்க இல்ல மண் புழுவின் நண்பனுக்கு மண்ணுல பல தொல்ல  இதை எல்லாம் தாண்டி நான் என்ன சொல்ல நானும் உங்களில் ஒருவன் ஆனாலும் வரும் வார்த்தையை கொல்ல மனம் இல்ல.

இருளென்ப ஒளியே ஒளியென்ப இருளே

 தெரியும் நீல வானம் அதன் பின்னே உள்ளயாவும் தெரியாது மறைந்து போகும். பச்சோந்தி நிறம் மாறும்  இந்த விண்ணும் நிறம் மாறுமோ என்ன, என்றாலு மிது  அதிசயத்தின் உச்சமென ஆகுமோ ஆவியாகும் நீர் கூட சாம்பல் மேகமாகுது காலை மாலை இளங்கதிரும் வானை சிவப்பாக்குது வானுக்கும் மானமுண்டு அதை தெரிவிக்க மேகமுண்டு இருளுக்கு விடையாகி விடியலிங்கு வந்தாலும் ஒளி வீசுங்கதிராலே கொல்லாமல் சுட்டாலும் இருளையும் ஒளியையும் புகழ்பாடி தீர்தாலும் அவ் விரண்டும் ஒன்றுக்குள் ஒன்றாகி நமை‌ முட்டா ளாக்கி விடும்  கதிரவனின் பின்புறத்தே  ஒளியுண்டோ தெரியவில்லை  கதிரவனே நெருங்க விரும்பும் காதலெது புரியவில்லை பேரொளிக் குள்ளும் இருளுண்டு  காரிருளுக்கும் சிறு ஒளி உண்டு  வெற்றுக்கண் சூரிய காட்சி சுற்றெல்லாம் இருளாக்கும் சுற்றிருள் பழகும் விழிகளுக்கு  சிறிதளவேனும் ஓர்  ஒளி கிடைக்கும். இருளென்ப ஒளியே ஒளியென்ப இருளே