Posts

Showing posts from August, 2023

கர்மத்தால் முக்தி

கர்மத்தால் பிறக்க  கர்ப்பத்தில் உயிர்கள் உதிக்கின்றன. அது சொர்க்கத்தை அடைய  மரணத்தின் வரையும்  படாத பெரும்பாடு படுகின்றன. உயிருக்குள் ஆத்மா  உலகில் உலாவி  மயிர் கொண்ட உடலோடு அலைகின்றன. மனமெனும் மாய வலை கொண்ட மாந்தர் வசமீர்க்கச் செய்யும் - செயல்களில் வழுக்கி விழுகின்றன. மான அவமானமின்றி இணமானத்திற் கிழுக்கு தந்து தன்மான‌ மில்லாமல் சன்மான மெதிர் பார்த்து சங்கடம் தரும் செயல்கள் பல செய்ய, சிலரின் சில செயல்பாடு உளத்தில் நல்லன்போடு உயிரும், உடலுறுப்பும் உள்ளது, நல்லது செய்திட வென்றறிந்து, செயலாற்றும் மனிதம் புனிதமே. கருவான கர்மம் பிறந்து புனிதத்தால் கடையென முக்தி யடையட்டும்.

மனமது இதயத்தின் மறு உருவோ

சொல்லாத சுகங்கள் என்னை பொல்லாத மிருகமாக்குது , துள்ளாத வயதும் கூட  துணிவோடு எகிரி குதிக்குது. இல்லாத இன்பமதை தினம் இருட்டுக்குள் மிரட்டித் தேடுது , ஆறடி போகும் உடலுமிங்கு யாருக்காய் அது ஏங்கி தவிக்குது. நாளு வாசலில் நாளும் துடிக்குது ரத்த நாளங்களை சுத்திகரிக்குது , கையளவுள்ள இதயம் ஒன்றோ காயக் காற்றை கையாள்கிறது. மனமெனு மங்கம் இல்லா போதும், உணர்வாய் மாறி உயிரை வதைக்குது. வாழ்வில் பாசம் வைத்து ஏமாறுவதில், பாடாய் பட்டுப் பைத்திய மாகுது. வைத்தியம் பார்த்திட பெண்ணை தேடுது, மருந்தாகும் காதல் மகத்துவ மானது. மனமது இதயத்தின் மறு உருவோ , இது உயர் சிறப்புடைய நற்பிறப்போ !

செம்மொழித் தமிழ்

ஓசைக்கு வடிவாகி உயிருக்குள் உறவாடும், வார்த்தைக்கு வயதறிய முடியாமல் தடுமாறும், வளம் பெற்று என்னில் வகுக்கவியலா, எண்ணத்து ஊற்று எங்கும் பரவிருக்கும். கலைகளின் உடல் மொழிக்கும், கலைஞனின் வாய் மொழிக்கும், வள்ளுநர் வகுத்த அமைப்பை ஒத்த இலக்கிய வரலாறுகளிங் கிருக்கும். மரித்து போகும் மனித இனத்தில் , மலர்ந்து கொண்டே மருவி வாழும், மரபில் மாற்ற மேதுமின்றி, தாய்மை உணர்வில் தரம் காணும். காலம் போல தனித் தியங்கும், தன்னை தாய் மொழியாகக் கொண்டோரை, தன் வளத்தால் அவ்வினத்தை இயக்கிவிடும், கலப்பின்றி களம் கண்டு  காலத்தில் வென்று விடும். பாட மறியாதவர்க்கு  பட்டறிவு தரும் பாடம், பல மொழிகள் இருக்கையிலே, வழி நடத்தும் புது மொழியாகி, எதிர்கால தலைமுறைக்கு  எடுத்துரைக்கு மன்றைய பழமொழியாகும் நடுநிலைமை தன்மை யுண்டு , கலையோடு இணைந்து காலப் பெட்டகத்தில்  சுவடு மாறா சுவையோடு, எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகுவதை , வின்னும் மண்ணும் வியந்து பார்க்கும், விஞ்ஞானம் சிறந்து , இத்தனை சிறப்புடன் செழித்திருக்கும், தமிழுக்கு தரணியில் தனிப்புகழுண்டு செம்மொழி என்னும் சிறப்புண்டு.