Posts

Showing posts from January, 2025

தாத்தா

நள்ளிரவு நேரத்தில்  எத்தனையோ எண்ணங்கள்  பித்தனாக்கிவிட யுத்தம் செய்கிறது எண்ணத்தில் என்னவென்று  புரியாமல் தள்ளாடும்  வயதுடைய அவருக்கு  என்னதான் தவமோ  ஏதேதோ பிதற்றும்  பித்து பிடித்த கிழவனுக்கு சித்தத்தில் சதுராடி யுத்தம் செய்யும் போராளி  எதிராளி யார் என்று  தெரியாமல் கதறுகிறான்  சிலநேர சிந்தை தெளிவு  எத்தனையோ காலத்தின்  அத்தனை மகிழ்ச்சியையும்  அழகாக சொல்லிவிட்டு  அந்திகாலம் இதுவோ என்று  அவன் கொள்ளும் பயத்தாலே  அறிவுரைகள் கொடுக்கின்றான்  மூன்று காலில் நடக்கையிலே  முக்காலம் உணர்ந்தவனாய்  துன்பமின்றி எக்காலமும் நாம் வாழ நல்லதொரு வழிகாட்டி ஆனாலும்  அவன் படும் பாட்டை  நாம் காண முடியாமல்  நாம் கொள்ளும் பயமே  உணர்த்துவது அவரின் இக்கால நிறைவை..

குடும்பம்

வயது மூப்பு வரும் வார்த்தை தடித்து விழும் பேச்சு எரிச்சல் தரும் ஏளன பார்வை ஒன்றே  எதிரியென எண்ண வைக்கும் இயலாமை ஏற்காமல் இயங்கிட இதயம் துடிக்கும்  கடந்த கால அனுபவத்தில் கற்சொல்லடி பட்டதெல்லாம் அனுபவமெனும் பெயரில் அங்கங்கு வழிநடத்தும் காசு பணம் பகிர்ந்தளித்தால் பார்த்து கொள்வார் என தோன்றும் எப்போதும் அவர் சொல்லை  கேட்கின்ற ஆள் தேடும் ஏதோவோர் சூழலிலே எதிர்ச் சொல்லைக் கொட்டி விட்டால் அவருள்ளம் வெந்து விடும்  நமக்கோ தொனதொனப் பேச்சு  தொந்தரவாகிவிடும் வேலை விட்டு வீடு வர  கோபங்கள் கொப்பளிக்கும் நிதானமே நிதானமாகும் ஓய்வெடுக்க உளமேங்கும் மீத வேலை மீண்டும் வந்து துரத்திக் கொண்டே தானிருக்கும் எல்லோரின் கருத்துகளும்  எதிர்பாராமல் எதிராகும் உடல் நலக் குறைகளும் உள்ளூர எரிச்சல் தரும் என்ன செய்வதென  புரியாத புத்திக்கு யுத்தகளச் சிந்தனையில் அமைதிக்காய் அலைபாயும் வளரிளம் பிள்ளைகளோ  கண்ட வாழ்க்கை சுகமென்று வீட்டிற்குள் வழக்காடும்  வீட்டுக்கு பொருளீட்ட வெளி சென்ற வேலையாள் வீட்டுக்குள் வரும் போது கணவனாக கனவு காண கண்களாலே கொப்பளிக்கும்  கோபமான வார்த்தைக...

அந்தி மாலை

அந்தி சாயும் இந்த வேலை  வானில் எங்கும் மேகமில்லை  அங்கிங்கு தெரியும் கதிரும் மனதை கொஞ்சம் கவரக் கெஞ்சும் கண்டு களிக்க கண்விழிக்க  காணுகின்ற வான் திரைக்குள்  எண்ணத்தின் ஏக்கங்களா மனதுக்குள் மயக்கங்களா இருளுக்கும் பகலுக்கும்  இடைப்பட்ட வேளையிலே  மனமும் வானும்  எதையோ எதிர்பார்க்க வாழ்க்கை மட்டும் மனிதனிடம் வழங்கியதைச் சரிபார்க்க  வாழ்நாளை துணையாக்கி  கடன் பெற்ற பிறப்புக்கும்  கடன் கொடுக்கும் இறப்புக்கும் இடையினிலே விருப்பும் வெறுப்பும் பொறுப்பும் துறப்பும்  நட்பும் மகிழ்வும் பகையும் சினமும்  உணர்வென வாழும் உயிரில் புகுந்து

நில இளவன்

இல்லற ஆசை எனும் இன்ப காற்று வந்து  சில்லென இருளில் மெல்லத் தீண்ட  சிற்சிறு விண்மீன் சித்திரமாகிட தென்றல் பேசும் மொழியை புரிந்து இலைத்தழைகளும் தலையை ஆட்டிட மாய உடலென படிந்த நிலத்தில் உயரிய மலைகள் தலையென விளங்க  ஆழ்கடலழகிய கால்கள் ஆகிட  வண்ண விசாலப் பசுமை நிறமோ  வாலிப எழிலுடன் வசீகரம் செய்ய இருள்வரும் பொழுதில் இருக்கிற வியப்பை  இன்ப மென்றெண்ணி மோகம் கொள்ள  பால்வெண் நிறமதி முக அழகில் பதினாறு செல்வத்தை மறைத்தவளை அன்பவா கொண்டு சிந்தையிலே உன்னை மயக்கத்துணிந்தவனை கண்டு வெட்கி முகிலுக்குள் மறைகையிலும் உன் எழிலும் மறையாமல் ஒளிர்கிறதே கரு மேகத்தை தூது விடுத்து மழை நீர் போலன்பைத் தூவித் தெளித்து  தனக்கு உயிர் தரும் கதிரவனை  நாற்றிசைப் பறந்த  இளவனாம் திரு நிலத்தவனை  பார்வையால் பயனுறச் செய்ய அன்பவா வாய் மட்டும் நிலை பெறவே அடைய முடி...யாதென எண்ணி வருத்தம் கொள்ளாமல்  தன் வாழ்வில்-பல்லுயிர்  புத்துயிர் கொண்டு வாழ்வதற்க்காய் தியாகம் செய்தானிந்த நில இளவன். குறிப்பு :  இளவன் என்கிற வார்த்தை இள வயது உடையவன் என்பதை குறிக்கும்.  அன்பவ...