Posts

Showing posts from October, 2022

மன்னிப்பாயா இப்படிக்கு நலன் விரும்பி

உணர்வான காதலை உறவோடு பார்த்ததால் விரும்பாத அன்பை வற்புறுத்தி தந்ததால் நீ மறக்க நினைக்கையில் உன் முன் வந்து நின்றதால் மதில் மேலே பூனையாய், உன்மனம் இருப்பதால் என் வசமாக்கிட நானிங்கு துடிப்பதால்  விரும்பா என் பேச்சினால் நீ காயப்பட்டதால் விளையாட்டு பிள்ளை என நீ நினைக்க காரணமானதால் என் விதி உன் வழியில் குறுக்கிட்டு செல்வதால்  என் மன வீட்டின் கதவை திறந்து, நீ குடி புகுந்ததனால் மன்னிப்பாயா இப்படிக்கு நலன் விரும்பி 

சமநிலையில் சந்தித்தேன்

மரணம் முடிவே இல்லையடா மனமது மனிதனுக் குள்ளவரை இருவகை எண்ணம் ஆட்கொள்ள பற்றில்லா அந் நிலையொன்றோ மனிதனான என்னை சமநிலை ஆகச் செய்யும் சோறும் நீரும் தேவைபடும் வரையில் ருசியும் பசியும் நம்மை வழிநடத்தும் கடந்து போக நினைக்கையிலே கடமையை எண்ணிப் பார்க்கையிலே  அதுவும் என்னை கட்டிப் போட்டுவிடும் மன்னை விட்டு மடியும் முன்னே இறைவா என்னை நீ வழி நடத்திச் செல் இறையா யாக்கி செல்லாமல் உருப்படும் உரமாய் மாற்றிச் செல் அதுவே நீ தரும் எனக்கோர் பெரும் வரமாகும். சங்கடங்களை நான் தவிர்த்தேன் சிந்தனையால் உன்னை சந்தித்தேன்  என்னை நோக்கி எந்நிலை வந்தாலும் சமநிலையில் உன்னை சந்தித்தேன்.

இயற்கையும், காதலியும் இவ்வகையே

ஆறுத லுரைப்பதும் அவளே அழ வைப்பதும் அவளே கேட்க வைப்பதும் அவளே  விட்டுகொடுக்க வைப்பதும் அவளே எண்ணத்தில் உதிப்பதும் அவளே இதயத்தில் உதைப்பதும் அவளே எழில் மிகுந்தவளே ஏங்கத் தகுந்தவளே இமைக்குள் இனிமை தந்தவளே விழிப்பில் கனவென கலைந்தவளே விதை க்கும் மண்ணெனும் கல் லறை ஆனேன்  என்னிலிருந்து முளைத்து எனக்கே புல்லெனும் கல்லறை ஆனவளே உனை அறுத்தெரிவோர் இருந்தாலும் உதிரும் உன் வித்துக்குயிர் தர நானிருப்பேன் காலமும் காதலும் மாறிவிடும்  கருவான இயல்பது மாறாது‌‌ உலகத்தில் இயற்கையாய் உள்ளத்து காதலியாய்‌.

துணை செய்க திருத்துணையே

உறவென்று சொல்வதா உயிரென்று சொல்வதா உடன் வருவோன்/ள் என சொல்வதா உடன் படுவோர்/ள் என சொல்வதா அறியாமலும் தெரியாமலும் ஆறுதலுரைப்பார் தோள் மீது கையிட்டு தோள் தந்திடுவார் தோல் கொண்ட உடலுக்கு மேல் கவசமாகி  உடைகாக்கும் மானம் போல் உயிர் காத்து நிற்பார் துணிவாக இருப்பார்  நமக்குறுதுணை யோடுமிருப்பார் வாழ்க்கை எனும் புத்தகத்தில் தாள்களாகும் இவர்கள் வரும் தயக்கத்தை தகர்த்தெரியும் வாள்களாகிருப்பார் உருவறியா தெய்வம் போல் உயிர் தந்த அன்னை போல் வழிகாட்டும் ஆசானாய் வழிநடத்தும் நண்பனாய் செல்வம் சேர்க்கும் தந்தையாய் செல்ல குட்டி குழந்தையாய் பட்டறிவு பாட்டுரைக்கும் பாட்டன் பாட்டியாய் தாலியில் உயிர் தாங்கும் தர்ம பத்தினியாய் யார் தான் நிலைத் துணை  எனத் தெரியாது ஆதலால் அத் துணைக்கும் துணை செய்க திருத்துணையே.

விருப்பமா

விரும்பாத வாழ்க்கையில்  விரும்பிட தான் எத்தனை, துரும்பாகி போனாலும்  துரத்தும் காந்தம் எத்தனை. காந்தம் உடையும் போதிலே மீண்டும் சேர மறுக்குதே, மன முடைந்த மனிதனுக்கு மட்டுமிங்கு மீண்டும் ஆசை பிறப்பதேன். தீண்டும் யாவுமிங்கு ஆசை தூண்டி செல்லும், அதை தாண்டி வாழப் பழக சில தடைகள் தந்து செல்லும். விடைகள் சொல்லும் வாழ்க்கை தேவையை மட்டுமே தேடலாக்க சொல்லும். அலைந்து திரிந்து தேடும் யாவும் தேவையாகிடாது அலைய வைக்கும் யாவும்  யாவருக்கும் தேவைபட்டிடாது.