தனிமை வேண்டும்
தாகம் தீர மோகம் மாற ஞானம் ஊற தனிமை வேண்டும் உறவை தாண்டி உணர்வை அறிய உள்ளம் தெளிய தனிமை வேண்டும் தன்னை மறந்து உயரே பறந்து ஓய்வின்றி திரிந்து உலகம் சுற்ற தனிமை வேண்டும் சுகத்தை அடக்க சுயத்தை சிதைக்க மனிதம் சிறக்க மதத்தை மறக்க சினத்தை இழக்க தனிமை வேண்டும் அனைத்தும் அழிக்க கர்மம் கழித்து சிவத்தை நினைக்க தனிமை வேண்டும்.