Posts

Showing posts from July, 2023

தனிமை வேண்டும்

தாகம் தீர  மோகம் மாற  ஞானம் ஊற  தனிமை வேண்டும் உறவை தாண்டி  உணர்வை அறிய  உள்ளம் தெளிய  தனிமை வேண்டும் தன்னை மறந்து  உயரே பறந்து ஓய்வின்றி திரிந்து  உலகம் சுற்ற  தனிமை வேண்டும் சுகத்தை அடக்க சுயத்தை சிதைக்க மனிதம் சிறக்க மதத்தை மறக்க சினத்தை இழக்க தனிமை வேண்டும்  அனைத்தும் அழிக்க கர்மம் கழித்து சிவத்தை நினைக்க  தனிமை வேண்டும்.

ஒழுக்கம்

இனிமை இதுவென தெரியாத வரையில் எதுவும் எதுவரையென  யாரு மறியாததால். இந்த சுயநல உலகம் செய்யும் பொது நலங்களில் கலகம் மக்கள் மனங்களை மறந்து செயல்படவா கழகம். அனங் கவளழகும் அதை காட் டிடுமவள் திலகம், அவள் கணவனின் உலகம் தாய்மையில் அவள் மனமிளகும். கொடுமைகள் நடக்கும், அவதிகள் பிறக்கும், முடிவுகள் எடுக்கத் தவறிடும் அரசில் , குடிக்குள் பல  குழப்பங்கள் வெடிக்கும். விதியினை‍ மதியது வென்றிடுமாம்! விதியது எதுவென தெரியாததுவே, மதியதை மனமது மதியாததால் , இப்படியோரிடர் இருப்பதினாலதை , வென்றிட தானந்த தவவலிமை எண்ணச் செயலை ஒழுங்காக்கும், அதிலெல்லா செயலும் சரியாகும், சரியாய் வாழ்வது யாவருக்கும் , எப்போதும் எங்கும் நலமாகும்

அனுபவிக்க தவறாதீர், ஒன்றிலடக்கி ஒடுங்காதீர்

காலம் முழுதும் வாழ்ந்தாலும் காதலின் அர்த்தம் தெரியாது, உள்ளுணர்வை உணரத் தெரியாமல்  உலகே விடிந்து கிடந்தாலும், விடை தேடும் இருளாய் உலகிருக்கும். உறவுக்குள் வருமுரை யாடலெல்லாம், குத்திக் காட்டுவதாக எண்ணிடுவாய். புத்தி, செயல் குணமென எதிலும் தடுமாறிடுவாய். ஆசைகளை தட்டி எழுப்பிவிடும் அதை மனங் காதலுக்குள்ளே புகுத்திவிடும் , புதைத்தது புத்துயிர் பெறவே  எதிர் பாலின ஈர்ப்பை  பெரிதாய் எதிர் பார்க்கும். ஆசைக்கும், இச்சைக்கும் தேவைக்கும், தேடற்கும் ஊடல், உறவுத் துறவுகளுக் கிடை  இடிபட்டு , ஊரார் வார்த்தைகளில்  சிக்கி சிதைபட்டு , உடலுக்கும் உணர்வுக்கும்  நடுவில் நடக்கும் பெரும் போரோ ! இல்லை இந்த உலகங் கொண்டாடும்  பாலினக் காதற் கோட்பாடோ ? காதல் ஒரு வித  புது வித உணர்வு புதிரான வாழ்வில்  புதிதாய் பிறக்கும் தெளிவு  அதை அனுபவிக்க தவறாதீர் ஒன்றில் அடக்கி வைத்து ஒடுங்காதீர்.

ஊன்று கோலின்றி நில்லுன் காலில்.

தடம் மாறித் தடுமாறும் பொழுது தடையாக அதையும் கருது தளர்வில்லா தெளிவாய் நடக்க நிச்சயம் வசமாகும் வெற்றி நமது. இடம் இன்றி வாழ்ந்தாலும் இணமின்றி போனாலும்  வலியின்றி வாழ்வேது  வலிமையது வழிகாட்டும் ‌‌வரலாறும் பறைசாற்றும்‌.‌‌‍‌‌ நித்தம் உனக்கொரு  யுத்தம் வருவதை போலுணரும்  நெஞ்சதனில் வித்திட்டு உழைப்பெனும் உரமிட்டு ஊன்று கோல்  இன்றி நில் உன் காலில். ஊக்கம் குறைந்தாலும்  ஏக்கம் நிறைந்தாலும்  தாக்கம் மாறாது காக்கும் கடவுளவனுண்டு முயற்சியின் வடிவில் அவனது அருளுண்டு.

விதி

பயணம் முடிய  பாதை இணைத்திடும்   நம் வாழ்க்கை முடியும் வரை  புதுப் புது நட்பு கிடைப்பது போல். ‌‌ பயணம் செல்லும்  வாகனம் போல நாம் இலக்குடன் சேர்ந்துப் புகழடைய குறிக்கோள் வாகனச் சவாரி செய்வோம். வழிகாட்டி வழிநடக்க  வில் அம்பே நல்லவழி வழிகாட்டும் வில்லே வளைந்தாலும் - அம்பாய் வில்லின் குறி அடையச் சீரிப் பாய்ந்திடனும். வேகம் எனும் வார்த்தைக்கு  வடிவரிய வேண்டுமெனில்  ஒளியை பார்த்தறிந்து  ஓயாமல் உழைத்திடனும். வாழ்க்கை எனும் வாகனத்தில்  விதியின் வழிப் பயணத்தில் நம் செய் வினைகள் நமக்காக - வழிகாட்டி  நம்மை திசை மாற்றுகிறான் அதனால் தான் விதியவன் தன்னை இறைவனெனப் பறை சாற்றுகிறான்.