Posts

Showing posts from February, 2024

சத்திரம் பேசுதடி

கதிர் மறைந்த போது  நீலம் படர்ந்த வானில்  ஒளிர துவங்கும் மதியுடன் மேகமற்ற வானமாய் தோன்றும் சில நேரத்தில்  வெடித்து சிதறும்  மனமுடைய மனிதர்க்கு மாலையாகும் வேளையில் குளுமை தரும் வளியுடன் வலி மறக்க வைத்திடும். அங்குமிங்குமாக  ஒளிர்ந்து மறைந்து விளையாடும் சுற்றி இருள் சூழத் துவங்க  ஒளிரும் மின்மனி விளக்காய்  ஆங்காங்கே பிறக்கும் அவை அந்தரத்தில் மிதக்கும் சில நகர்ந்து கொண்டே இருக்கும் இதனோடு இணைந்தவனை நகரவிடாமல் வசமிழுக்கும். புரியாத புதிர் தொடுக்கும்  வான வெளி சத்திரத்தில்  நட்சத்திரம் சிரிக்கும்  பூமி வாழும் மனித கூட்டம் வானம் பார்த்து வியக்கும் சிதறிய வின்மீன்கள் எல்லாமும் சிந்தனையை கொடுக்கும் வீழும் சூழலிலும் மிதக்க - ஆசானாகும்  நாமதனிடம் அன்போடு கற்க.

என்னவென்று சொல்வதென்னை

எத்தனையோ ஆசைகள்  சித்தத்தில் உதிக்கிறது  எண்ணாமல் இருக்கத் தான் என் மனமும் நினைக்கிறது என்ன செய்வதென  தெரியாமல் தவிக்கிறது ஏதேதோ ஆசைகள்  இம்சைகள் செய்கிறது கண்மூடி  என்னை நான் காணுகையில் நான் என்பவன்  நீண்டு நெடுகிடையாகிய குப்பை உயிர் பூதங்கள் இருப்பதால்  நான் மனிதப் பொறிகளின் தொகை இதே உணர்வோடு வாழ நினைக்கிற பித்தன் சில நொடிகளில் வாழ்ந்து பார்த்திடும் சித்தன் நான் அந்த பரமன் வாழ்த்திய பக்தன் இப்பிறப்பில் அவன் பாதம் பணிந்திடில் முக்தன்.

அப்பா அன்பே உனக்கு

சிந்தாதிரி பேட்டையில அடுக்குமாடி கோட்டையில சிகிச்சைகாக வந்தவங்க  சினேகிதமாகி போனாங்க எது எங்க எப்படி நடக்கும் தெரியாதே அவனோட கணக்கும் ஆனாலும் உனக்கும் எனக்கும்  ஏதோவொரு தொடர்பது இருக்கும் பத்து திங்கள் சுமந்தவளின்  பாசத்திற் குரியவனே இருதிங்கள் மட்டும் தான்  உனக்காக உடனிருந்தேன் சிரித்த பல நாள்கள் சண்டையிட்ட சில நாள்கள் அன்பை பகிர்ந்த  அழகான நாள்களவை பழக்கம் ஒன்று நீ கொள்ள  பழிவாங்க உன் உயிர் கொல்ல உருவெடுத்த உயிர் கொல்லி உணவை தடுத்து உயிரை குடிக்குது.. உனக்கு பிள்ளையாய் நான் பிறந்திடவே எந்த பிறப்பில் யான் செய்த தவமோ என் அப்பா உனக்கு  என் அன்பே உனக்கு.

துடிப்பும் தவிப்பும்

இதயமனியின் இனிய ஓசை  கதறும் ஆசையின்  கனிந்த மொழியா உருண்டை தலைக்குள் புரளும் எண்ணம் புயலில் பறக்கும் புழுதித் துளியா விழிக்கும் செவிக்கும் இணைக்கும் அமைப்பது  நினைக்க மொழிக்க உதவிடுமா தலையில் தொடங்கி தரையில் முடிய தினமும் பயணம் தொடர்ந்திடுமா  கரையில் அடங்கி காற்றில் கலந்து உயிரும் ஊசல் ஆடிடுமா