Posts

Showing posts from July, 2024

பெண்ணிலல்ல உன்னில்

அடைய விரும்புவதை ஆழ்மனம் ரசிப்பதே காதல் பெண்ணில் அல்ல உன்னில் நாம் காமத்துக்கு அடிமை  இது காலகால கொடுமை  ஆலகால நஞ்ச-ருந்திய  இறைவன் வந்து சொன்னாலும்  திருந்தாதது இந்த இளமை. மோகமொரு யோகமென  வேகமுறு மாந்தருக்கு சோகமென சோர்வு தரும்  உணர்வுகளின் உள்ளாட்சி  சொல்லாட்சி செய்யும் உலகத்தில் சான்றோர் சொல் கேளாது செல்லும் சொற்ப கூட்டமது அற்பத்தனமாய் சுற்றம் பாராமல் சுற்றி திரிகிறது இன்பமிதுவென்று அன்றை கழிக்கிறது துன்பம் வரும்போது துடித்து தவிக்கிறது பருவத்தில் முளைக்குங் காதல் சோகத்தில் முடிந்தால் பக்குவமடையும் பாவத்தில் முடிந்தால் மூச்சினை முறிக்கும் உற்றவளுளம் புகுந்து உன்னுல கவளாகவும் அவளுலகு நீயாகவும் மாறினால் போதும். காலங்கள் கூட சொல்லலாம்  காதலில் கூட வெல்லலாம். அடைய விரும்புவதை ஆழ்மனம் ரசிப்பதே காதல் பெண்ணில் அல்ல உன்னில்.

நடுரோட்டு நள்ளிரவில்

நள்ளிரவு நேரம் நடுரோட்டில் நானும் மல்லாந்து படுத்தா  கண் பார்க்கும் வானம். தென்றல் தொட்டு போக  உடல் கொசு கடியால் நோக அந்த இதமான நேரத்திலும்  மனம் எதையோ தேடி போக. பகல் போல வெளிச்சம் தடிச்ச இடம் வலிச்சும் தல சாச்சி படுக்க  தரையில் இடம் கிடைச்சும் கண்ணுறங்க முடியாம  உடனெல்லோரும்  தவிச்சோம். குத்து பாட்டு கேட்டு  மனம் குதூகளிக்க அமைதியை அப்புறமனுப்பிப்  புலம்பியதென் மனம் வரிகளை எழுதி .

உறவால் குடும்பம்

ஆதியில் பிறக்கும் மனிதனுக்கு  வாழ்க்கை பாதியிலே தான் தொடங்குது மீதியை வாழ்ந்து முடித்தால் தானே வாழ்வும் முழுமை அடையுது கருவை காத்து சுமந்தவளுக்கும் பேறு பெருகையில் வேரொரு கைவிரல்  சுட்டிக் காட்டுதல் மட்டும் தானே தன்சேய் என்று எண்ணத் தூண்டும் தஞ்சேய்க்காய் அவள் பாசம் தந்தால் பாசத்துடனே பசிக்கு பாலும் தந்தே சேயின் மீது நேசம் காட்ட சேயும் உணருங்காலத் தாயும் ஆனால் தாயும் ஆனவள் தன் விரலாலே சுட்டி காட்டும் பொழு தொன்றதிலே உந்தன் தந்தை இவரே என்று  அவனுக் குணர்த்தக் காரணமாகலாம் அன்னை தந்தை பிள்ளை தொட்டு இவை யத்தனையும் சுட்டிக் காட்டும்  யாரோ ஒருவர்  நம்மாழ் மனதுள் நாமும் ஏற்க. ஏதோ ஒரு புள்ளியில் இணைந்து நம்பிக்கை எனும் பேருணர்வாலே உருவாகிறது உறவால் குடும்பம்.

சாதி...

சாதிக்கும் வரை வாழ்பவரும் சாதிக்காய் வாழ்பவரும் சங்கமிக்கும் இச்சமூகத்தில் தலைமுறையின் தலைவிதியை  திருத்த எவரும் தேவையில்லை சாதிக்கும் நெறி உண்டு சாதனைக்கும் நெறி உண்டு . நெறி என்னும் பொதுவுடைமை தன்னுடைமையில் பொருத்தி பிறழாமல் வாழ்தலே பேரின்ப மென்றுணர்ந்திடில் சாதனை சரித்திரமாகிடலாம் நடைமுறையில் நல்லொழுக்கம் நாம் கடைபிடித்தே அடையாளம் சாதியெனும் அகந்தையதை மனதில் அடியோடு அழிப்போம் தரமாக வாழ்ந்து சமமான சமூகத்தில்   சண்டைகளை தவிர்த்து சாதனைகள் படைப்போம்.