நடுரோட்டு நள்ளிரவில்



நள்ளிரவு நேரம்
நடுரோட்டில் நானும்
மல்லாந்து படுத்தா 
கண் பார்க்கும் வானம்.

தென்றல் தொட்டு போக 
உடல் கொசு கடியால் நோக
அந்த இதமான நேரத்திலும் 
மனம் எதையோ தேடி போக.

பகல் போல வெளிச்சம்
தடிச்ச இடம் வலிச்சும்
தல சாச்சி படுக்க 
தரையில் இடம் கிடைச்சும்
கண்ணுறங்க முடியாம 
உடனெல்லோரும்  தவிச்சோம்.

குத்து பாட்டு கேட்டு 
மனம் குதூகளிக்க
அமைதியை அப்புறமனுப்பிப் 
புலம்பியதென் மனம் வரிகளை எழுதி .

Comments

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

' முற்காலம், இக்காலம், எக்காலம் நற்காலம் '

இதயம்

மனைவி

ஒழுக்கம்

சாதி...

பிள்ளை