Posts

Showing posts from March, 2025

சுனிதா வில்லியம்ஸ்

கருவறை இருட்டில் உதித்து பிறப்பில் மண்ணை மிதித்து சமூக உருட்டைக் கடந்து பாலினப் பேதம் மறந்து சரித்திரம் படைக்க  பிறப்பாலே சங்கமித்தாய்  பெற்றோரால் இப்பாரதத்தில். நாடுகளிடை உள்ள நல்லுறவில் நாடுகள் தன்னிடம் - உதவியை  நாடிடும் அளவுள்ள படிப்பறிவால் நல்ல இப்பிறப்பில் உன் நம்பிக்கையை நாங்களும் கண்டு வியந்திடவே நாங்கள்  காட்டையும்  கடலையும் காற்றையும்  நெருப்பையுங்கண்டு களித்துள்ளோம் காண இயலாப் பெரு வெளியில் கீழிழுக்காப் புவிவிசையில் ஆய்வு செய்யச் சென்றவளே இயந்திரப் பழுதுக் காரணத்தால் பெருவெளியும் உன் வரவில்  நெடுநாட்கள் மகிழ்வடைய பெருந்திட்டம் போட்டிற்றோ? மானுடத்தை விஞ்சும் ஒரு மறைப் பொருளை உணர்த்திற்று மதித்துணிச்சல் நிறைந்திருந்த மங்கையுடனான மாண்புமிகு நண்பரையும் வானவெளியிலே வாழ இடம் தந்து  வருங்காலத் தலைமுறை  வாழ வழித்தந்து. அறிவுடைய மனிதர்களின்  ஆற்றலுக்குச் சிறப்பு செய்து அறிவுச் சிக்கலினை  அங்கங்கே திருத்த  காலத்தின் பதிலில் ஆசானாய்ப் பிறப்பெடுத்து, அண்டந்தாண்டிய அவ்விடத்தில் அவளுக்காய் அமைந்த  அழகானத் தாய் வீடோ? ஈர்ப்பு வ...

ஆண்டு விழா

ஆடிப் பாடும் ஆசையுடன்  மேடை ஏறும் குழந்தைகளுக்காய்  கூடுகிறதொரு கூட்டம். பள்ளிப் படிப்பும் பழகும் நட்பும் நினைத்துப் பார்க்க  சுகமாய்த் திகழ ஒவ்வொரு ஆண்டும்  விழா எடுக்கும்  திறமையின் அங்கீகாரமும்  உழைப்பின் உன்னதமும் வெற்றியின் ருசியும் விடாமுயற்சியின் பிறப்பும் குழந்தைத் தொட்டு  குடும்பப் பிணைப்பும் வளர்ந்தோர் நினைவில்  வருகிற  பள்ளிக் காலப்  பழைய நினைவென மனித வாழ்க்கையில் எல்லாவற்றையும் கொண்டாடிப் பழக கற்றுக் கொடுக்கிறது  ஆண்டு விழாக்கள்.

செத்துப் பிழை

சிதறிய அரிசி மலையுயர மனிதனுக்கு ஒரு பருக்கை‌. சுமக்க வழியின்றி இழுத்துச் செல்லும் எறும்புக்கு அது பொக்கிஷம். நான் ஒரு எறும்பு பெற்றோர்களின் பாதங்கள் தொடும்  உதடுகளுக்கு பாவங்கள் இல்லை. கவிதையும் தந்தையும் ஒன்று வார்த்தைகளால் வாழ்வை செதுக்குபவர்கள். வாழ்ந்து பாருங்கள் கவிதையின் வார்த்தையிலும் தந்தையின் வாழ்த்திலும் அவன் எனும் பேரழக ராஜனுக்கு இவனே ஆணழக வேந்தன். சாஸ்திரங்கள் என்பது சடங்கு  ஆன்மீகம் என்பது சங்கமம், சடங்குகளை பின்பற்றினால் தான், சங்கமத்தை அடையும் போது சடங்குகள் எதற்காக என்று விளங்கும், இல்லையேல் சந்தி சிரிக்கும். சங்கமமடைந்தால் உடலே ஆலயம் உள்ளமே தெய்வம். அற்ப சுகங்களென்று  சொற்பமாய் எண்ண வேண்டாம். அற்ப சுகங்களே சில நேரம்  அற்ப ஆயுளுக்கு காரணமாகவும், அற்ப ஆயுளில் சில நேரங்களில்   ஆகச் சிறந்ததுவு மாகலாம். அற்ப சுகங்களுக்கு ஆசை படுங்கள் தவறில்லை  பழக்கப் பட்டுவிடாதீர்கள் பழிவாங்கியே தீரும். யாதுமானவன் இறைவன்  அவனை அடைய நமக்குப் போதுமானவனாய்  பெற்றோர் உ(ரு/ற)வில். ஜோதியானவனை  வீதியில் தேடுவதும். நீதியினை நிதியால் வெல்வதும். நில...

அடுப்பாங்கரை

உன் அடுப்பாங்கரையின் வெப்பம்  உனக்குள் இருக்கும் கோபமாய் அடுப்பாங்கரையின் அலங்கோலம்  உன் மனதில் மாறா காயமாய் அடுப்பாங்கரையில் அவிந்த வாசம்  உன் உள் ஐச் சமைத்த பொறுமையாய்  அடுப்பாங்கரையின் அலமாரி உன் அவசர புத்தி அடுக்குகளாய் அடுப்பாங்கரையின் அடுப்புத் தீ உன் ஆசைக்கு இட்ட கொள்ளித் தீயாய் தலையில் நீர்ப் பட  சிலரின் தேகம் குளிரும் பெண்ணானவளுக்கு  தலையில் நீர்ப் பட  வியர்வைச் சொட்டும் அடுப்பாங்கரை அனல் தணிக்க தூங்கும்முன் தலை  நீரைத் தாங்கும் பாவம் அடுப்பாங்கரைக்கு அவள் மேல் என்றும்  அவளே, அறியா வகையில்  ஒருதலைக் காதல் .

இதயம்

தரையின் இதயம்  தரைக்குக் கீழே  இருப்பதினால் தான்  தனக்குள் புதைந்த விதைகளை  தரைக்கு மேலே முளைக்க வைக்கிறது மனிதனின் இதயம்  மார்பில் இருப்பதை மறந்து மண்டைக்கு மேலே  இருப்பதை போலே  நினைப்பதினால் தான்  தன்னை மட்டும் யோசிக்கிறது.