என் பெயர் இரா. கௌசிக்ராமன் (ஒளிரும் மழைத்துளி கவிதை நூல் ஆசிரியர்).
உங்கள் கருத்துகளை WHATS app ல் கூறவும் & புத்தகம் பெறவும் (6380461376).
இத்தளத்திலுள்ள படைப்புகள், சமூக கண்ணோட்டத்தை மையமாக கொண்டு அமையப் பெற்றதாகும்.
அறம் செய்திடவே தரம் தாழ்ந்திடுவோம் தற்புகழ் மறந்தே தானஞ் செய்திடுவோம் கரம் கொடுத்தே நாமுதவிடுவோம் சினங்கடந்தே சில தொண்டுகள் செய்வோம் மனமுடைந்தோர் மறு வாழ்வு பெற ஆறுதலை நல் வாக்கு செய்யும் வழி மாறித் தடம் மாறுகையில் கல்வியால் நல்வழி காட்டிடுவோம் கற்றறிவால் புதிதொரு விதிசெய்வோம் உணவோ டுடுக்கை இல்லா உயிர்கட்கு எடுத்திறைத்திடும் நல்மனம் நம்முள் விதைத்திடுவோம். செருக்கை செருப்பாய் எண்ணிவிட செருப்பாவோம் தலைமேலதுவும் ஏறிவிட்டால். ஈகையில் இன்முகப் புன்னகை பார்திடுவோர் இறைவனை அவரினில் கண்டு மகிழ்ந்திடவே. உயிரினும் மனிதம் உயர்வென மறவாமல் உயிர் போகும் நிலையொரு உடற்கண்டு உதவிக்கரம் தனை நீட்டாமல் உற்ற பொழுதில் கண்டுங் காணாமல் நமக்கது நிகழ்கையில் உணராமல் மானுடம் வளர மனிதம் மலர்ச்சி அடையட்டும். இருக்கும் வாழ்க்கை இறப்பதற்கே அதில் தேவைக்கதிக மிருப்பது இறைப்பதற்கே வலிகள் வரும் வழி பலவிருந்தும் வாழ்வு நல்வழி ஆவது ஈகையிலே மனித நேயம் என்பதிங்கு மனிதற்கானது மட்டுமல்ல எல்லாமு...
தொட்டில் பிறப்பிலே தாலாட்டு கேட்பது போல். ஊட்டும் உணவும் பாலுமே உடலுயிரை வளர்த்திடும். காளை காணியில் கழுநீர் குடித்து உழைத்திடும். களப்பை தாங்கும் கைகளே, கால் வயிற்று கஞ்சி வார்த்திடும். வித்து தாங்கும் மண்ணே சத்தான உழவின் சொத்தாகும். உழவனின் திறம் எவ்வாறு எந்திரத்துக் கிணையாகும். நடவு, வரப்பு அறுவடைகள் நாமறியவேண்டும். மழைநீரும் காற்றும் ஒளியும் விதையை, வேருடை மரச் செடிகளாக மாற்றும். பிளவு பட்ட உலகில் உழவு திக்கு எட்டும் வாழும். தலைமுறை பல கடந்து யாவையும் இது ஆளும். சேறு கண்ட கைகள் பலருக்கும் சோறு போடும். வாங்கிய கடன் நின்று சில நேரம் இவர் வாழ்வை கொன்று போடும். உலகை காக்கும் உழவால் உடலுயிரை காக்க வேண்டும் தம்பி உழவை காக்க நாமும் உழைத்துப் பார்க்க வேண்டும்.
பருவத்தில் விதைத்த ஆசைகள் பயிராகி விளைந்து நிற்கையில் உருவத்தில் உள்ள ஆசையை உருத்தெரியாமல் சிதைத்தவள் காட்சிப் பிழையில் கழிந்த இரவுகளை காதலை சாட்சியாக்கி மாற்றினாள் வாலிபத்து வயசுக் கோளாறுக்கு மருந்தாய் வந்தென்னைத் தேற்றினாள் காத்திருந்த காதல் சுகம் கனிந்தது அவள் வார்த்தையால் ஆனால் ஏக்கம் இன்னும் தொடருது அவளுடன் வாழும் நேரம் எதிர்ப் பார்ப்பதால்
யாரோ படைத்த யாரோ ஒருவரால் யாரோ ஒருவரில் யாரோ ஒருவராய் யாரோ ஒருவருக்கு யாரோ ஒருவரைத் தந்து யாரோ ஒருவராகவே வாழ்ந்து யாருக்கும் உதவாத யாரோ ஒருவராய் உலகைப் பிரிகிறோம் எனக்கு நீரும் உமக்கு நானும் என்றும் யாரோ... இரவிடம் உடலைக் கடன் வாங்கி விண்மீனொளியை உயிராக்கி விளையாடுவேன் மனித வாழ்வில் ரசனை உணர்வாகி விடையாவேன் இருளுக்கு அருளும் ஒளியாகி எதிராவேன் நிலையற்ற நிலவொளிக்கு பகையாகி தேடுகிறேன் ஓடுகிற வேகமதில் வாடுகிறேன் கூடுகிற மோகமதில் நாடுகிறேன் நான் வாழும் நலம் தேடி மூடகிறேன் என் வாழ்வை இயற்கையின் இதயத்துடிப்பாக்கி.
வள்ளுவனாம் வள்ளல் - வார்த்தை தந்து செல்லும் துள்ளல் அதிகாரம் அறிந்து கொள்ளல் தீமையாகும் பிறரை கொல்லல் . தமிழின் ஓசைக்கும் தமிழ் மேலுள்ள ஆசைக்கும் மீசைக்கு சொந்தக்காரனை அடையாளம் ஆக்கிவிட்டோம். தமிழும் தலையெடுத்தது விடுதலைத் தலையெழுத்தும் திருத்தி உயிர்தெழுந்ததை திரும்பிப் பார்க்க வைத்தான். யாருடா பாரதி தமிழ் தேருக்கு சாரதி. மூட நம்பிக்கை தீமிதி முடிவெடுக்கும் முன் தாமதி காற்று வெளியிடை காணம் கேட்கிறது மாற்றி யோசியென மனமும் துடிக்கிறது . பரந்த உலகினில் என்செவி பரவுமிடமெலாம் பறவை மொழியது விளிக்கும் கதையது பாரதத்தின் சரித்திர சுதந்திரம்
முற்காலம் அக்காலம் பொற்காலம் எக்காலம் நற்காலம் எதிர்காலம். முற்காலம் முதல் தோன்றிய கற்காலம் அக்காலம் மரப் பட்டையை உடலின் சட்டையாய் மாற்றிய பொற் காலம் இக்காலம் ...
கருவறை இருட்டில் உதித்து பிறப்பில் மண்ணை மிதித்து சமூக உருட்டைக் கடந்து பாலினப் பேதம் மறந்து சரித்திரம் படைக்க பிறப்பாலே சங்கமித்தாய் பெற்றோரால் இப்பாரதத்தில். நாடுகளிடை உள்ள நல்லுறவில் நாடுகள் தன்னிடம் - உதவியை நாடிடும் அளவுள்ள படிப்பறிவால் நல்ல இப்பிறப்பில் உன் நம்பிக்கையை நாங்களும் கண்டு வியந்திடவே நாங்கள் காட்டையும் கடலையும் காற்றையும் நெருப்பையுங்கண்டு களித்துள்ளோம் காண இயலாப் பெரு வெளியில் கீழிழுக்காப் புவிவிசையில் ஆய்வு செய்யச் சென்றவளே இயந்திரப் பழுதுக் காரணத்தால் பெருவெளியும் உன் வரவில் நெடுநாட்கள் மகிழ்வடைய பெருந்திட்டம் போட்டிற்றோ? மானுடத்தை விஞ்சும் ஒரு மறைப் பொருளை உணர்த்திற்று மதித்துணிச்சல் நிறைந்திருந்த மங்கையுடனான மாண்புமிகு நண்பரையும் வானவெளியிலே வாழ இடம் தந்து வருங்காலத் தலைமுறை வாழ வழித்தந்து. அறிவுடைய மனிதர்களின் ஆற்றலுக்குச் சிறப்பு செய்து அறிவுச் சிக்கலினை அங்கங்கே திருத்த காலத்தின் பதிலில் ஆசானாய்ப் பிறப்பெடுத்து, அண்டந்தாண்டிய அவ்விடத்தில் அவளுக்காய் அமைந்த அழகானத் தாய் வீடோ? ஈர்ப்பு வ...
மலையில் விடுபட்டு பாறையாய் பிறப்புற்று விரிசலில் உடைபட்டு மழையில் அரிப்புற்று அருவியோடு விழுந்து ஆற்றோடு கலந்து கடலோடும் பொழுது கரை ஓரம் படர்ந்து கதிரொளியில் காய்ந்து காற்றுத் துகளாகி அந்தரத்தில் பயணித்து மெல்ல நகர்ந்து புயலில் புலம் பெயர்ந்து நிலத்தை குடியாக்கி குடியை குழியாக்கி நீரை நீ தேக்கி செடி வளர வளம் சேர்த்து மனித பிறப்புக்கு மானமும் பசியும் மரத்தால் மறைய விளை நிலத்தின் மூலாதாரமாய் மனிதன் காலுக்கடியில் கிடந்து இத்தனையும் தாங்கி எல்லோரின் வசைபாடலுக்கும் மண்ணு எனும் வார்த்தைவழி வாழ்வாங்கு வாழ்கின்றாய்
Comments