என் பெயர் இரா. கௌசிக்ராமன் (ஒளிரும் மழைத்துளி கவிதை நூல் ஆசிரியர்).
உங்கள் கருத்துகளை WHATS app ல் கூறவும் & புத்தகம் பெறவும் (6380461376).
இத்தளத்திலுள்ள படைப்புகள், சமூக கண்ணோட்டத்தை மையமாக கொண்டு அமையப் பெற்றதாகும்.
அறம் செய்திடவே தரம் தாழ்ந்திடுவோம் தற்புகழ் மறந்தே தானஞ் செய்திடுவோம் கரம் கொடுத்தே நாமுதவிடுவோம் சினங்கடந்தே சில தொண்டுகள் செய்வோம் மனமுடைந்தோர் மறு வாழ்வு பெற ஆறுதலை நல் வாக்கு செய்யும் வழி மாறித் தடம் மாறுகையில் கல்வியால் நல்வழி காட்டிடுவோம் கற்றறிவால் புதிதொரு விதிசெய்வோம் உணவோ டுடுக்கை இல்லா உயிர்கட்கு எடுத்திறைத்திடும் நல்மனம் நம்முள் விதைத்திடுவோம். செருக்கை செருப்பாய் எண்ணிவிட செருப்பாவோம் தலைமேலதுவும் ஏறிவிட்டால். ஈகையில் இன்முகப் புன்னகை பார்திடுவோர் இறைவனை அவரினில் கண்டு மகிழ்ந்திடவே. உயிரினும் மனிதம் உயர்வென மறவாமல் உயிர் போகும் நிலையொரு உடற்கண்டு உதவிக்கரம் தனை நீட்டாமல் உற்ற பொழுதில் கண்டுங் காணாமல் நமக்கது நிகழ்கையில் உணராமல் மானுடம் வளர மனிதம் மலர்ச்சி அடையட்டும். இருக்கும் வாழ்க்கை இறப்பதற்கே அதில் தேவைக்கதிக மிருப்பது இறைப்பதற்கே வலிகள் வரும் வழி பலவிருந்தும் வாழ்வு நல்வழி ஆவது ஈகையிலே மனித நேயம் என்பதிங்கு மனிதற்கானது மட்டுமல்ல எல்லாமு...
தொட்டில் பிறப்பிலே தாலாட்டு கேட்பது போல். ஊட்டும் உணவும் பாலுமே உடலுயிரை வளர்த்திடும். காளை காணியில் கழுநீர் குடித்து உழைத்திடும். களப்பை தாங்கும் கைகளே, கால் வயிற்று கஞ்சி வார்த்திடும். வித்து தாங்கும் மண்ணே சத்தான உழவின் சொத்தாகும். உழவனின் திறம் எவ்வாறு எந்திரத்துக் கிணையாகும். நடவு, வரப்பு அறுவடைகள் நாமறியவேண்டும். மழைநீரும் காற்றும் ஒளியும் விதையை, வேருடை மரச் செடிகளாக மாற்றும். பிளவு பட்ட உலகில் உழவு திக்கு எட்டும் வாழும். தலைமுறை பல கடந்து யாவையும் இது ஆளும். சேறு கண்ட கைகள் பலருக்கும் சோறு போடும். வாங்கிய கடன் நின்று சில நேரம் இவர் வாழ்வை கொன்று போடும். உலகை காக்கும் உழவால் உடலுயிரை காக்க வேண்டும் தம்பி உழவை காக்க நாமும் உழைத்துப் பார்க்க வேண்டும்.
வெற்றுச் சாலையில் சிலர் வேகமாய் ஓடினர் கையில் சிறு குச்சியுடன் வேகமாய் ஓட்டினர். வடிவத்தில் வேறானாலும் ஒற்றுமையின் இலக்கணத்தை சீரான வேகத்தில் சுழன்றோடிய விதத்தில் ரோதை எனும் சக்கரத்தால் பாதை போகும் போதிலே சொல்லாமல் சொன்னார்கள் மொழி உயர நிற நாடோடு உடலாலும் பிரிந்தோற்கும் புரியும்படி.. தன் மேலேறி தனை உதைத்து தானும் கீழே விழுந்தாலும் தாங்கி பிடித்தும் தட்டி கொடுத்தும் பாசம் தருவாள் தாயைப் போலப் புவியன்னை என...
முருகா உன் அருளாலே மயிலாகி போனாலே என் மீது உனை சுமப்பேன் வின் மீதும் நான் பரப்பேன் கலியுகத்து வலி எல்லாம் உன் கருணை கடை விழியாலே காணாமல் போகிவிட கந்தா உன் அருள் வேண்டும் அப்பனுக்கு பாடம் சொன்ன சிவன் அவனின் ஆசானே ஆண்டியாக இருந்தாலும் அண்டி வரும் அண்பருக்கு அருள் தருவாய் எங்கள் அழகா சிக்கலினை தீர்ப்பவனே சிங்கார வேலவனே சாட்சியாகி காட்சி தரும் எங்கள் சாமி தானே
ஓசைக்கு வடிவாகி உயிருக்குள் உறவாடும், வார்த்தைக்கு வயதறிய முடியாமல் தடுமாறும், வளம் பெற்று என்னில் வகுக்கவியலா, எண்ணத்து ஊற்று எங்கும் பரவிருக்கும். கலைகளின் உடல் மொழிக்கும், கலைஞனின் வாய் மொழிக்கும், வள்ளுநர் வகுத்த அமைப்பை ஒத்த இலக்கிய வரலாறுகளிங் கிருக்கும். மரித்து போகும் மனித இனத்தில் , மலர்ந்து கொண்டே மருவி வாழும், மரபில் மாற்ற மேதுமின்றி, தாய்மை உணர்வில் தரம் காணும். காலம் போல தனித் தியங்கும், தன்னை தாய் மொழியாகக் கொண்டோரை, தன் வளத்தால் அவ்வினத்தை இயக்கிவிடும், கலப்பின்றி களம் கண்டு காலத்தில் வென்று விடும். பாட மறியாதவர்க்கு பட்டறிவு தரும் பாடம், பல மொழிகள் இருக்கையிலே, வழி நடத்தும் புது மொழியாகி, எதிர்கால தலைமுறைக்கு எடுத்துரைக்கு மன்றைய பழமொழியாகும் நடுநிலைமை தன்மை யுண்டு , கலையோடு இணைந்து காலப் பெட்டகத்தில் சுவடு மாறா சுவையோடு, எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகுவதை , வின்னும் மண்ணும் வியந்து பார்க்கும், விஞ்ஞானம் சிறந்து , இத்தனை சிறப்புடன் செழித்திருக்கும், தமிழுக்கு தரணியில் தனிப்புகழுண்டு செம்மொழி என்னும் சிறப்புண்டு.
காலணி தொலைத்த கவலையில் கால்கள் எங்கோ போகுது வலுவிழந்த வேளையிலே வான் முகில் வாழ்க்கையைத் தந்தது. ஸ்.... என வாய்ச் சத்தம் போட சூரிய ஒளியால் சாலைகள் கால்களில் செய்கிற யுத்தம் ஆக அக்கினிக் கோலத்து ஆகாயச் சூரியனோ நடுவானம் ஏறி வெறுங்காலில் நடப்போரைக் காரித் துப்ப தார்ச் சாலையைத் தன் வாயாக மாற்றி கால்களில் காயம் செய்யும் காலைக் கண் வணங்கும் கதிரவனின் காலக் கோலம் நிழல் தேடித் திரியுமிந்த செருப்பில்லா வெற்றுக்கால் நடக்குமிம் மதிய நேரம்.
Comments