' விவசாய நாடு விஷங்களால் கேடு '
மரபணு மாற்று விதைகளெல்லாம் மண்ணையும் நம்மையும் மலடாக்கும். எண்டோ சல்ஃபான் தெளிப்பதெல்லாம் உடலுயிரை நச்சுக்கு இறையாக்கும். கசப்பு தன்மை காய்களெல்லாம் கடும் நஞ்சையும் எதிர்த்து நன்மை செய்யும். மழை நீர் பாசனம் செய்திருப்பீர் வேளான் தந்தையின் சிறுநீர் பாசனக் கூற்றை எடுத்துரைப்பீர். யூரியா தெளித்துப் பார்க்கிறோம் விதைக்கே விஷத்தை விதைக்கிறோம். கருச் சிதைவை காண்கிறோம் எமனையும் எதிர்க்கும் எருவை வெறுக்கிறோம்.