' தாமிரமா தமிழ்நாடா '

கடலலை வீசிய ஊரும்

கண்ணீரில் மூழ்கிப் போகும்

தாமிரம் உருக்கு ஆலை

மெல்ல உயிரைக் குடிக்கும் நாளை

கருதரிப்பை நினைத்த மனம்

கருச்சிதைவை எண்ணி அழும்

நெஞ் செரிச்சலினால் பலர் வாட

அணி திரண்டனர் எதிர்த்து போராட

மூச்சு திணரல் கொடுத்த கொடுமை

கோப உணர்வைத் தூண்டிட 

மக்கள் போராட்டம் அதை காட்டிட

அரசாங்கம் இருந்தது 

அதிகாரம் அடக்குது

ஆதய அரசியலில் 

அடிபணியும் மக்களுக்கு - எப்போதுமே

அநியாயம் நடக்குது.


Comments

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

' முற்காலம், இக்காலம், எக்காலம் நற்காலம் '

இதயம்

மனைவி

ஒழுக்கம்

சாதி...

பிள்ளை