கவலை எனும் ' கல்வி '
கம்பியில்லா சிறை ,
கவலையான கல்வி முறை ,
காற்றோடு போய் விட்டது
காந்தியின் பேச்சு ,
மதி தேடும் சிந்தையாக
காந்தி நோட்டு ஆச்சு .
கல்விக் கூடம்
அனைத்திலும்
எவனோ சொன்ன பாடம் ,
பேருக்கு தமிழுக்குள் சில
பாடலினைப் பாடும்
கல்வி முறை தந்த அறிவெல்லாம்
முறை தவறி
காசதனைத் தேடும்.
ஒரு வேளை சோற்றுக்கும்
உழ(வ)வினையே நாடும்.
Comments