' காதலும் ' ' காலனும் '

காதல் மனங்கள் இணையும் திருமணம்
இங்கு சாதி கலவர காலனின் சிறையினிலா ?

உயிர்கள் பிரிந்தும் காதல் மலர்வது
சமாதி எனும் கல் அறைதனிலா ?

கால மாற்றம் நேருகையில் - காதலின்
தோற்றம் கௌரவ கொலைகளின் வடிவினிலா ?

கொலை நடந்தாலும் கொஞ்ச பாசம்
பந்தங்கள் சிந்திடும் கண்ணீரிலா ?

காதல் என்பதை ஆயுதமாக்குதல்
காமம் அதனை தேடிடவா? 
நாசம் செய்யும் நாய் இவனென்று
தாயின் வாயாற் கேட்டிடவா ? 

சிற்றின்பத்தில் 
பேரின்ப பேயினை கண்டவனை
கண்டவன் என்றிடும் தாயின் குரல். 

கொச்சை காதல் உள்ள வேளையில்
கொண்ட காதலை வென்றிட நினைப்பவரை 
மத வெறி கொண்டே  மதியிழந்து 
பிள்ளையின் உயிரைப் பருகுதல்
வேண்டாம் கொலை புரிந்து. 

Comments

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

' முற்காலம், இக்காலம், எக்காலம் நற்காலம் '

இதயம்

மனைவி

ஒழுக்கம்

சாதி...

பிள்ளை