' இயற்கையாம் இறைவன் '
உல்லாச உலகில் உற்சாக இறவு ,
உன்னோடு தான் நிலவே என்னுடைய உறவு.
இரவுக்குக் கோடிக்கண் வைத்தான் - அவன்
பகலுக்குள் வேடிக்கை படைத்தான்,
வாழ வளமுள்ள நிலத்தை வாடகை விடுத்தான்
சுயநலத்தால் இயற்கையை மனிதன் அழித்தான்.
பணம் எனும் காகிதம் பெற - தம்
நற்குணங்களைப் பாடையில் விடுத்தான் ,
ஓர் நாள் அவனும் துடித்தான் ,
காசது மாசென் றுணர்ந்தான் ,
எல்லாம் கால் தூசுக்கு நிகரென அறிந்தான் ,
மாண்டதும் மீண்டும் இயற்கையோ டிணைந்தான்
ஆதியும் அந்தமும் அதுவெனத் தெளிந்தான் ,
பின் இறைவன் என்பதே இயற்கையென்றான் .
உன்னோடு தான் நிலவே என்னுடைய உறவு.
இரவுக்குக் கோடிக்கண் வைத்தான் - அவன்
பகலுக்குள் வேடிக்கை படைத்தான்,
வாழ வளமுள்ள நிலத்தை வாடகை விடுத்தான்
சுயநலத்தால் இயற்கையை மனிதன் அழித்தான்.
பணம் எனும் காகிதம் பெற - தம்
நற்குணங்களைப் பாடையில் விடுத்தான் ,
ஓர் நாள் அவனும் துடித்தான் ,
காசது மாசென் றுணர்ந்தான் ,
எல்லாம் கால் தூசுக்கு நிகரென அறிந்தான் ,
மாண்டதும் மீண்டும் இயற்கையோ டிணைந்தான்
ஆதியும் அந்தமும் அதுவெனத் தெளிந்தான் ,
பின் இறைவன் என்பதே இயற்கையென்றான் .
Comments