' நாடோடி '

சாலை ஓரம் கூடாரம் ,
பசியோடு போராடும் ,

அங்கும் சில உயிர் வாழும்  - கூத்து 
ஆடி உயிர் காத்து வரும் .

ஏங்கிப்பார்க்கும் குழந்தைக்கு
கல்வி மட்டும் கிடைப்பதில்லை ,

பள்ளி செல்ல நினைத்தாலும்
சாதிச் சான்றே பெருந் தொல்லை ,

மனிதம் என்பது மலரவில்லை,
மதி தரும் கல்வியில்.

தனி மனிதன் உலகில் மாறும் வரை
ஏழ்மை ஒழிய வாய்ப்பு இல்லை .

புரியா மொழியே பேசும் கூட்டம் ,
புசிக்கும் உணவை பகிர்ந்து ஊட்டும் ,
அன்பை என்றும் ஆழக் காட்டும் 
குறவரினத்துக் குதூகளிப்பில்

முழுமையாய் மூடாதிடமிதுதான் ,
முதலிரவும் இங்கே நடப்பதுதான்.

நாடோடி வாழ்வோடு இயல்பின் 
முரணாய் வாழ்பவர்தான்.

Comments

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

' முற்காலம், இக்காலம், எக்காலம் நற்காலம் '

இதயம்

மனைவி

ஒழுக்கம்

சாதி...

பிள்ளை