' ஈரோடு '
திங்கள் இரவினில் திங்கள் ஒளிச் சுடர் ,
தங்கியே எங்கும் திறண்டு நிற்கும் ,
மக்கள் கூட்டம் மானம் மறைக்கும் ,
ஆடைச் சந்தையை நோக்கி நிற்கும் ,
இங்கே திராவிடத் தந்தைக்கும் இடமிருக்கு ,
மஞ்சள் மாநாகரென மற்றொரு பேரிதர்க்கு ,
கொங்கு மண்டலம் ஈரோட்டில் ,
கவுண்டர்கள் உறவுகள் படர்ந்திருக்கு ,
அதர்க்குள் கனிவுத் தமிழும் அடங்கிருக்கு ,
சத்தியமான சாத்திய இயற்கை ,
சத்திய மங்களம் தனிலே ஒழிந்திருக்கு ,
சந்ததி காக்க நினைத்த ஒருவனுக்கு ,
சந்தனக் கடத்தல் வீரப்பன் என பெயரிருக்கு ,
அர்த்தனாரிக்கும் மலை இருக்கு ,
அண்டை நாமக்கல்லில் அடங்கிருக்கு ,
ஊரின் உயர் புகழ் சொல்லிடவே ,
ஊரட்சிக் கோட்டை மலை இருக்கு ,
கர்னாடகத் தண்ணீரை எதிர்ப் பார்த்து ,
வறண்ட காவிரியும் வழியில் விழிவைத்து காத்திருக்கு ,
இத்தனையும் ஈரோட்டில் ,
இதற்கும் இடமுண்டு வறலாற்றில் .
Comments