' பிள்ளைகளின் புலம்பல் '

அழுகுற குழந்தைய ,

ஆயகிட்ட விட்டுப்புட்டு ,

ஹாயா காசு சேர்க்க நீங்க ,

வேலைக்குத் தான் போகுறீங்க ,

குழந்தைக்காக வாழுவோன்னு ,

குழப்பத்தோட வாழுறீங்க ,

பாசங்காட்ட மறந்துப்புட்டு ,

பெத்தவங்க வேசத்துக்குள் ஒளியுறீங்க ,

பணத்தின் முன்னே பாசத்தையும் ,

மோசமாக பாக்குறீங்க ,

நல்ல நல்ல உறவை எல்லாம் ,

காசே நாச மாக்குதுங்க ,

வெள்ளை உள்ளப் பிள்ளை மனதை ,

பாசம் கொள்ளை அடிக்குதுங்க .

Comments

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

' முற்காலம், இக்காலம், எக்காலம் நற்காலம் '

இதயம்

மனைவி

ஒழுக்கம்

சாதி...

பிள்ளை