' பிறப்பின் சிறப்பு '
மண்ணிலே பிறந்து ,
மண்ணிலே மடியும் ,
மனிதப் பிறவியிலே ,
மனிதனின் ஆதி அந்தம்
அடங்குவ தென்னவோ அம்மணமொன்றிலே .
உடலை உயிரும் விட்டுப் பிரிந்திட ,
குப்பை போலே மண்ணில் மடிந்திட ,
உதவியாய் உறுப்பினை தானம் செய்தால்
உறுப்புகளால் உயிர் வாழ்ந்திடவே ,
ஓர் உயிருக்குறுதுணை ஆகிவிடும் .
பிறப்பும் இறப்பும் சமமென இருக்கும் ,
மனதில் பணமோ ஏற்றத்தாழ்வினை படைக்கும் ,
வரமாய் நமக்கும் வாழ்க்கை கிடைக்கும் ,
வாழ்வின் பலனது தானத்தால் சிறக்கும் .
Comments