' குமரியும் ' ' குமுறலும் '

எட்டுத்திசை உள்ளது ,

எத்திசையும் இவன் உயிரை துச்சமென எண்ணுது ,

தாக்கம் கண்ட தலைநகரை செய்தி சொன்னது ,

ஏக்கம் கொண்ட குமரிக் குரலும் நீதி கேட்குது .


காற்றும் புயல் வழி புரட்சி செய்தது ,

குமரியும் குமுறல் காட்சியானது ,

பசியை போக்க படகில் சென்றவன் ,

பாடையில் வரும்நிலை யாகியது .


பாரில் படர்ந்த நீருமிங்கு ,

பாவப் பட்டவன் கண்ணீராகியது ,


ஆலோசனைக்கென அரசும் அங்கே கூட்டம் போட்டது ,

கணக்கைக் கோடிக்கணக்கில் காட்டிக்

கொள்ளையடிக்கப் பாக்குது ,

அழுகுரலிங்கு முரசாய் அவன் உயிர்ப் பிரிவைச் சொன்னது ,

உழவன் நிலம் போல் இவனது வாழ்வும் (தரி)சாக உள்ளது .

Comments

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

' முற்காலம், இக்காலம், எக்காலம் நற்காலம் '

இதயம்

மனைவி

ஒழுக்கம்

சாதி...

பிள்ளை