' "தண்ணீரா " "கண்ணீரா" '

ஆறு லிட்டர் ரத்தத் தண்ணீர் 
மனிதனை ஆட்டிப் படைக்குது ,

கலைத்துப் போன உடலும் இங்கு 
கால் லிட்டர் தண்ணீர் கேக்குது

ஆறுகள் பாய்ந்து ஓடிய பூமி ,
காடுகளாக கிடக்குது ,

குடினீருன்னு குடுவைக்குள் விற்க்கும் ,
கொடுமைகள் இங்க தான் நடக்குது ,

கண்முன் காணா ஆண்டவனுக்கு ,
அபிசேகங்கள் நடக்குது ,

நாற்காலிக்கு ஆசைப்பட்டு 
ஓட்டை வாங்கும் கூட்டம் இங்கே
ரோட்டில் விட்டுப் போகுது

தண்ணீருக்குக் கண்ணீர் விடும் - பல
குழந்தையின் உயிர்களும் துடிக்குது ,

ஒவ்வொரு காரும் லச்சம் லிட்டர் ,
தண்ணீருல தான் குளிக்குது ,

பாவம் பாக்குற - மக்கள் 
கூட்ட மெல்லாம் 
கண்ணீரைத் தான் வடிக்குது .

Comments

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

' முற்காலம், இக்காலம், எக்காலம் நற்காலம் '

இதயம்

மனைவி

ஒழுக்கம்

சாதி...

பிள்ளை