' போராட்டம் '

மண்டியிட்ட ஆட்சியில் சண்டைப் போட்டு வெல்லுவோம் ,
மாண்டுவிட்ட போதிலும் போராடியே வீழுவோம் .

வாக்களித்த அரசுமின்று 
வாய்க்கரிசியை போட்டது ,
அடையாளமாகிய 
கைவிரல் மையது ,
அநியாயம் நடத்திட 
போட்ட திட்ட பொய்யிது ,

கறை வேட்டி கரை சேர ,
மக்களையும் கப்பலாக்கி ,
மூச்சு திணற மிதக்கவிட்டு
முதுகின் மேலே மிதிக்குதே,
வாக்குப் பிச்சை கேட்பதும் வழக்கமாகிப் போனதே .

காந்திப் படமொன்றுதான் 
காகிதத்தில் வந்ததால் ,
காசுக்காக செய்யும் வேலை காந்தியமென்றாகுமா ?

இலை தழையில் உடையணிந்தான் நாகரிகம் பிறந்தது ,
உழவரின உடுக்கை இழப்பு உரிமை இன்மை உணர்த்துது .

பகல் நன்பகல் இடையே 
நான்கே மணி நேரம் தான் ,
போராட்டமே வாழ்வென்றால்
நாளும் நமக்கு பாரம் தான்.

Comments

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

' முற்காலம், இக்காலம், எக்காலம் நற்காலம் '

இதயம்

மனைவி

ஒழுக்கம்

சாதி...

பிள்ளை