' தன்னம்பிக்கை '

தட்டி கேட்க நினைத்தால் - சிலர் 
வெட்டி கொன்று போடும் - இங்கே 
கவலையின்றி வாழ்ந்தால் - நம் 
முயற்சி வெற்றி பெரும் காலம்.

கொட்டி கொட்டி கொடுக்கும் கைகள் ,
பிறரை குட்டி குட்டி பறிக்கும்
சிந்தை சீற்றமாகும் பொழுது ,
ரத்தம் கூட கொதிக்கும் 
நித்தம் போராடிடவே துடிக்கும் .

எச்சம் மிச்சம் எல்லாம் 
இங்கே உச்சம்  கொள்ள ,
லட்சக் கணக்கில் 
லஞ்சம் கேட்டு
நித்தம் தொல்ல.

இனிமேல் இங்கே இல்லை 
யாரும்  நம்மை வெல்ல 
தன்னம்பிக்கை கொண்டால் போதும் 
நல்வழியில் நாமும் நடந்துச் செல்ல.

முயற்சியோடு பயிற்சி எடு ,
தோல்வியிலும் எதிர் நீச்சலிடு ,

புலியென பதுங்கிப் பாயாமல்
அங்கம் முழுதும் ரௌத்திரம் கொண்டு ,
அங்கங்கே நாம் பொங்கி எழுந்தால் ,
என்றும் வெற்றி தங்கும் நம்மைச் சுற்றி .

மது மாது மத சாதி 
மனிதனின் விரோதி 
எல்லாமும் அகன்றுவிட்டல் 
நாமே தூய்மையின் அகராதி .

Comments

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

' முற்காலம், இக்காலம், எக்காலம் நற்காலம் '

இதயம்

மனைவி

ஒழுக்கம்

சாதி...

பிள்ளை