' பெண் படும் பாடு '

பிறப்பின் இயற்கை மாறுதலால் ,
அந்நாட்களில் விலகும் உறவுகள் ,
அவளுள வேதனை எண்ண மறப்பது ஏன் ,
அவளுக்கன்பை தர தவிற்பது ஏன் ?

மாதத்தில் மூன்று நாள் ,
மரணத்தின் வாயில் வரை ,
எட்டிப் பார்க்க வைக்கும் வலி ,
பெண்ணாக பிறந்தவர்கள் தப்பிக்க ஏது வழி .

கழிவறை இல்லா கிராமத்தில் ,
கவலையான காலத்தில் ,
கழிக்க முடியா கோலத்தில் ,
கண்ணீரில் காலந்தள்ளிய

பெண் பிறப்போ 
இன்றைக்கும் பல அவலத்தில் .

பெற்றெடுக்க பத்து மாதம் சுமக்கிறாள் ,
பிள்ளை தாங்க வலி பொறுக்கிறாள் ,
பிறக்கும் நேரம் துடிதுடிக்கிறாள் ,
பிள்ளைக்கு உயிரைப் பாலாக கொடுக்கிறாள் .

பெண்மைக்கும் வாழ்க்கைக்கும் இடையே
அவள் போராடியே உயிர் வாழ்கிறாள் .

Comments

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

' முற்காலம், இக்காலம், எக்காலம் நற்காலம் '

இதயம்

மனைவி

ஒழுக்கம்

சாதி...

பிள்ளை