' பன்முகம் கொண்ட பால்வினை '
தீராத நோயும் ,
தரும் ஆராத காயம் ,
இல்லா வானில் ,
மேகமென நில்லாது ஓடும்.
கொள்ளாத உடலுறவால் ,
உயிரைக் கொல்லாமல் கொல்லும் ,
விரல் தொடுதலில் , மூச்சு விடுதலில் ,
நோய் பறவாமலிருக்கும் ,
முறையில்லா உடலுறவுகள் ,
உயர் முடிவுகள் தந்து செல்லும் ,
உயிரினை பரித்துக் கொள்ளு(ல்லு)ம் .
பால்வினை நோய் ,
பல விதங்களில் தொற்றும் ,
பெற்றோரின் சந்தேகக் கண்ணில் ,
தென்படுவதோ குற்றம்,
இதனால் பல உயிர்கள் ,
ஆதரவற்று தான் சுற்றும் .
Comments