' இயற்கையின் இழப்பு '

தவமாய் பெண்மை ,
தவழும் பிள்ளை ,

நீண்ட வானம் ,
நில்லா நேரம் ,

கரை வரும் அலை ,
கடவுள் சிலை ,

தடவும் தென்றல்,
தருகிற மரங்கள் ,

விடைபெறும் பகலில் ,
விடியும் இரவு ,

இரவின் மடியில் உறங்கும் நிலவு ,
பகலில் படரும் பகலவன் அழகு ,

உயர்மா மலைகளில் ,
உயிர்த்தெழும் காடு ,

அழுகிற மேகம் ,
வழிகிற அருவி ,

பறவைகள் பாடல் ,
இசைத்திட கருவி ,

மணங் கொண்ட மலர்கள் ,
வானவில் நிறங்கள் ,

தாயின் கருவில் அழகிய பிறப்பு ,
மண்ணுக்கு எருவாய் அழகிய இறப்பு ,

இயற்கைக்குள் அடங்கிய இத்தனை  சிறப்பு ,
செயற்கைகுள் புகுந்து கண்டது இறப்பு .

Comments

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

' முற்காலம், இக்காலம், எக்காலம் நற்காலம் '

இதயம்

மனைவி

ஒழுக்கம்

சாதி...

பிள்ளை