வர்க்கச் சாதி

பணக்காரர் எல்லாம் 
ஏழ்மை கடந்து எழுந்தவர் தான் 
ஏழை என்பார் அவர் 
ஏழ்மையிலும் எளியவரே.

ஏழ்மை எனும் தாய் மரமிடையே
பிரியும் கிளையாம் வர்க்கங்கள் 
வர்க்கங்கள் இங் கிரண்டல்ல
முயற்சிக்கு இது தடையல்ல.

ஏழ்மையில் தாழ்மை கொடிதாகின்
தாழ்மையில் கீழ்மையின்மை உயர்வாகும்
பணக் காகிதத்தின் அரசாட்சியினால்
சாதிகளும் செத்து மடிந்துவிடும்.

சாதியின்  தோற்றம் இயற்கை எனில்
ஆதியில் பிறந்தவன் எந்தச் சாதியினன் ?
இருந்தும் இத்தனை சாதிகள் இருப்பது ஏன்?

குரங்கில் தோன்றிய மனித இனம் 
சாதிக்குள்ளே குறுக்குவதேன். 

Comments

Unknown said…
Thazhmayil keezhmayinmai uyarvagum...varigal puriya vilai kavingnare.
நிலை தாழ்ந்த போதும் கீழ்த்தனமான எண்ணம் இல்லாமை உயர்வாகும்.

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

' முற்காலம், இக்காலம், எக்காலம் நற்காலம் '

இதயம்

மனைவி

ஒழுக்கம்

சாதி...

பிள்ளை