கவிதை

ரசித்து எழுதும் வரிகள் 
வார்த்தை பசிக்கு உணவு 
துடித்து எழுதும் வரிகள் 
தவிக்கும் இதய விளைவு .

சில மணித்துளி தான் செலவு
அறிவை சிந்தனையாக்கிடும் உறவு
அதில் எத்தனை கருத்துகள் வரவு 
சில தந்திடும் மாபெரும் பிளவு .

அழகூட்டும் கற்பனையிடம் பல களவு
அது அறிவாற்றல் காட்டும் செறிவு
காலப் புரட்சிகள் போற்றிய துணிவு 
காதல் கவிகளில் எத்தனை கணிவு .

கவிதை ஒரு மடந்தை 
நான் விளையாடிடும் சிறு குழந்தை .

நான் கவிதையின் வளர்ப்பு 
அதுதான் எனக்கு உயிர்ப்பு. 

Comments

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

' முற்காலம், இக்காலம், எக்காலம் நற்காலம் '

இதயம்

மனைவி

ஒழுக்கம்

சாதி...

பிள்ளை