கண்ணீர் க/கவி தை

சிறகடிக்கும் இமைக்குள்ளே
சிறைபட்ட விழியாகி
வழிந்தோடும் கண்ணீரே
வரலாற்றின் வழித்தடமாய். 

கார் மேகம் கூட்டம் கண்டு
வண்ண மயில் ஆடிடலாம்
வான்மழையும் தூவிடலாம்
அதில் கண் மழையை மறைத்திடலாம்

மழைக்கு ஒதுங்கிப், பதுங்கிய ஓட்டை கீற்றாக 
கண்ணீர் விடுவது கொஞ்ச நேரம் தான்
அதன் காரணம் காலம் முழுவதும் வாழுவதால்

லட்சிய கனவுகள் காணல் நீராக
தடைபட உள்ளம் உடைந்திடும் நூறாக
அமையட்டும் நாளை என்பது 
இக் கண்ணீர் கதைக்கு மாற்றாக. 

Comments

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

' முற்காலம், இக்காலம், எக்காலம் நற்காலம் '

இதயம்

மனைவி

ஒழுக்கம்

சாதி...

பிள்ளை