' "கொரோனா" அலை அல்ல வலை '

உயிரை விலையாக்கி
காற்றிலே விளைகிறது ,

வலி தாங்கும் இதயம் இங்கே
வளி கிடைக்க வழி தேடித் திரிகிறது.

உருவமே இல்லாமல் 
உயிருக்குள் உயிர் வாழ்ந்து ,

உலகத்தை உலுக்க
உலாவிப் பரவிடுது.

இமைக்குள்ளே குடியிருந்து
விழிக்குத் தெரியாத ,

வலிக்கும் தூசியைப் போல்
உறுத்தி உயிர் குடித்து விடும் .

இருமலின் இருப்பிடமாய் , 
தும்மலின் துடிப்பிடமாய் ,

காற்றில் பயணித்து
காயத்தை மாயமாக்க ,

கண்ணாமூச்சி ஆட்டத்தில் 
கண்டறிய முடியாத ,

மக்கள் கடலில் ,
நோயின் அலையில் ,

உயிர் மீனை பிடிக்க
வரிசையில் காத் திருக்கிறது ,


கொரோனா என்னும் கொடிய வலை. 

Comments

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

' முற்காலம், இக்காலம், எக்காலம் நற்காலம் '

இதயம்

மனைவி

ஒழுக்கம்

சாதி...

பிள்ளை