காலனை விடவும் காலநிலை
சாலையோரம் கடை போட்டு - கூவுவாங்க
காய்கறிகள எடை போட்டு.
அடுக்கி கெடக்கும் சோத்துதட்டு,
அழகா ஆவி பறக்கும் இட்லி தட்டு.
பலூன், பஞ்சுமிட்டாய், பொம்ம கடைய
சுத்தி வரும் குழந்தைங்க அசட்டு.
முழம் பத்து வித்துடத்தான்,
ஊரெல்லாம் வலம் வருவான்.
அளவெடுத்து அடுக்கி இருக்கும் - செருப்பாகி
நடைபோட துணை இருக்கும்.
வளையல், ஊசி பாசி மணி இருக்கும்,
அது வளைச்சு நம்மை போட்டிருக்கும்.
ரகரகமா பிரிச்சு வச்ச,
விதவிதமா துணி இருக்கும்,
இத்தனைக்கும் மேல அந்த - ரோட்டு
கடைக்குனு ஒரு சிறப்பிருக்கும்.
சிரமப்பட்டு சேத்துடுவான்
அஞ்சு பத்து பாத்துடுவான்
பேரம் பேசும் மக்களுக்கும்
அன்பு ,பாசங் கருணை காட்டிடுவான்.
கடனில் கடைய போட்டுடுவான் - கடங்காரன போல்
காவல் காரனுக்கும் மாமூல் கொடுத்திடுவான்.
இத்தன தொல்லயும் தாண்டி வந்தா
பெருந்தொல்லை தருதடா
காலனை விடவும் காலநிலை.
Comments