காலனை விடவும் காலநிலை

சாலையோரம் கடை போட்டு - கூவுவாங்க
காய்கறிகள எடை போட்டு.

அடுக்கி கெடக்கும் சோத்துதட்டு,
அழகா ஆவி பறக்கும் இட்லி தட்டு.

பலூன், பஞ்சுமிட்டாய், பொம்ம கடைய
சுத்தி வரும் குழந்தைங்க அசட்டு. 

முழம் பத்து வித்துடத்தான்,
ஊரெல்லாம் வலம் வருவான்.

அளவெடுத்து அடுக்கி இருக்கும் - செருப்பாகி 
நடைபோட துணை இருக்கும். 

வளையல், ஊசி பாசி மணி இருக்கும்,
அது வளைச்சு நம்மை போட்டிருக்கும்.

ரகரகமா பிரிச்சு வச்ச,
விதவிதமா துணி இருக்கும்,

இத்தனைக்கும் மேல அந்த - ரோட்டு
கடைக்குனு ஒரு சிறப்பிருக்கும்.

சிரமப்பட்டு சேத்துடுவான் 
அஞ்சு பத்து பாத்துடுவான்

பேரம் பேசும் மக்களுக்கும்
அன்பு ,பாசங் கருணை காட்டிடுவான். 

கடனில் கடைய போட்டுடுவான் - கடங்காரன போல் 
காவல் காரனுக்கும் மாமூல் கொடுத்திடுவான்.

இத்தன தொல்லயும் தாண்டி வந்தா
பெருந்தொல்லை தருதடா 
காலனை விடவும் காலநிலை.

Comments

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

வேற்றுமையில் ஒற்றுமை

வேர்கடலை

முருகா

செம்மொழித் தமிழ்

நண்பகல்

மதுவே உயிரே