Posts

Showing posts from November, 2022

ரசனை

கோடி கண் கொண்ட இரவினிலே ஒற்றை விழியின் பளிங்கொளி  -  நிலவு தொடுவதிலே நுறை தள்ளும் தொட்டணைக்க கரை துள்ளும்  -   கடல் உருவில்லா உணக்கு உயிர் எதுவோ  உலவுவதால்  -  காற்று  எழுத்தறியாத உனக்கே வாயும் மொழியும் பல்லாயிரம்  -  இசை குறுகிய வட்டத்தில் ஓடும் பலரது திட்டத்தின் அமைச்சரோ  -  கடிகார நேரம்  அவன் படுத்தே தான் கிடப்பான் தலை உடலில்லாது நம் தலைக்கு மேலே. -  வானம் வெற்று‌ சபையில்  வெற்றி பெற்றவனாய் ஒளிர்கிறான்  -  நட்சத்திரம்  முகவரி இன்றி முகதுதி அமையும் முகமாய் அவனுக் கெது அமைந்திடுதோ  -  ரசனை.

' திருத்தி வழி நடத்த ' ' துரத்தல் தவறில்லை '

நீ பெண்ணெனும் தீயானாய் புகைப்பானாகி நின்றேன் காற்றெனும் காதலில் கரைந்து  வாழ்வை இழந்துவிட்டேன் உள்ளே அழுகை எனக்காய்  ஒரு ஆறுதலுரைக்கிறது காமம் என்தன் கண்ணை  கட்டி கூட்டிபோகிறது இருட்டு உலகில் நடக்கு குருட்டு மனம் துடிக்க - இருளின் சாம்பல் நிறத்தொரு ஒளியில் எனக்கும் வழிகிடைக்க விழியை கட்டிய காமம் அவ்விருளிலும் வழி கொடுக்க எனை திருத்தி வழிநடத்த எத்தவறும் எனை துரத்தி வருவது தவறில்லை.

எல்லாம் அவனே ஆனால் அதில் அவனில்லை

தாயும் விட்டு போவாள் தந்தை விட்டு போவார் உறவும் விட்டு போக இந்த  உலக நியதி தன்னில். இருக்கும் போது யார்க்கும் அருமை புரிவதில்லை இருட்டில் வெளிச்சம் தேடி  அலையும் போது தொல்லை. காமமுறும் பருவம்  காதல் அறிவதில்லை காதல் உடையவர்கு ரத்த உறவின் உயர்வறிவதில்லை ரத்த உறவு உடையவர்கு இந்த உலகு புரிவதில்லை உலகை அடைந்தவர்கள் நிறை பரம்பொருளை அறிவதில்லை ஆதரவற்றவன் அரவணைப்பை தேடுவான் ஆழமாய் அதிலன்பை கொட்டுவான் அப்படியே இந்த பிரபஞ்சந்தன்னில் பிறப்பாய் பாலாய் இறப்பாய் விருப்பாய் வெறுப்பாய் உறுப்பாய் உயர்வாய் தாழ்வாய் நேற்றாய் இன்றாய் நாளையாய் காலையாய் மாலையாய் ஆசையாய் ஓசையாய்  கல்லாய் புல்லாய் சிலையாய் கலையாய் கிளையாய் மரமாய் வரமாய் காமமாய் ஊனமாய் ஞானமாய் தானமாய் தாகமாய் தர்மமாய் தாக்கமாய் ஏக்கமாய் அளவாய் அறிவாய் நோக்கமாய் நீக்கமாய் எங்கும் நீக்கமற யாதும் நீயென  நிறைந்து நிற்கிறாய் இறைவா........... எல்லாம் ஆனவனே ஆனால் நீ  அதில்லில்லை  அறிவால் நாமுணரும் வரை

துறவு

முக்கால் துறந்த முனிவர்கள் முக்கிற்கு முக்கு முப்பது பேர் இத்தனை இருந்து என்ன செய காமக் காலை கடக்கக் கால் முயலலையே சிந்தனை துளிர்ந்த சித்தர்களோ பலர் சந்துக்குள்ளே சங்கமிப்பார் சித்தம் தெளியும் சமயத்திலே  சிக்கித் தவிப்பதை தாண்டத் துணியலையே ஆழமாய் அறியும் முனைப்பிருக்க ஆனிவேரிருப்பதை அறிந்திடலாம் வேரில் பாதிப்பு உள்ளதெனில் விரலின் நகம்போல்  நல்வேருக்கு குறையுடை வேரை மட்டும் வேரறுப்போம். விதையில் கோளா றுள்ளதென்றால் கவலை கொள்ள தேவையில்லை  காலம் கடந்ததும் உரமாகி  எங்கும் நமக்குறுதுணை செய்யும்.

தொடரியிலிருந்து இறங்கி தொடருது பயணம்

ஓடிக் கொண்டே இருப்பதெல்லாம்  ஓர் நாள் ஓய் வெடுத்து விடும் இயற்கையுடன் ஓர் பந்தயத்தில்  நாங்களும் இங்கு பங்கு கொண்டோம்  செயற்கைக்கு துணை ஆகி நின்றோம் தொடரி பெட்டியில் நாங்கள் தொற்றி கொள்ள  தொடங்கிய ஓட்டப் போட்டியிலே தொடரி முன் தொடர்ந்தோடியது இயற்கை பின்னோடியது வென்று விட்டோம் என இறங்குகையில் இன்னும் சிலரதில் பயணம் செய்ய கண்ணோட்டம் மாறியது  எழில் மிகுந்த வளங்கள் நிலையாக இருந்திடவே  தொடரி இங்கு தொடர்கதை‌ யாகிறது இயற்கை தந்த செயற்கையில்  இயற்கைக்கு சதி ஆகிறது.

ஒரு தலை காதல்

ஒற்றை வார்த்தையை கேட்கவும்  அவள் விழி என்னை பார்க்கவும் புலன் மொழியில்‌ பேசுவோம்  புன்சிரிப்பில் நாணுவோம் மனம் கணத்து போகிட காரணம் அவள் அருகில்லை எனும் நினைப்பா இல்லை நம்மை பாடாய் படுத்திடுமிந்த பணத்திடம் உள்ள பிணைப்பா தேடி வருகையில் ஓடி ஒளிகிறாய் காணல் நீராய் காணாமல் போகிறாய்  வாழ்வு மட்டுமல்ல விருப்பமும் ஓர் பயணம் போல தான்  தொடக்கத்தில் மகிழ்வாகவும் முடிகையில் வலியாகவும்  கசாப்பு கடை ஆடுகள் கூட  கத்திக் கொண்டே மடிகிறது காதல் சொல்ல வார்த்தை இன்றி  ஒரு தலை காதலும்  மட்டும் மௌனத்திலேயே முடிவது ஏன்.