ரசனை

கோடி கண் கொண்ட இரவினிலே ஒற்றை விழியின் பளிங்கொளி  -  நிலவு

தொடுவதிலே நுறை தள்ளும்
தொட்டணைக்க கரை துள்ளும்  -   கடல்

உருவில்லா உணக்கு
உயிர் எதுவோ  உலவுவதால்  -  காற்று 

எழுத்தறியாத உனக்கே
வாயும் மொழியும் பல்லாயிரம்  -  இசை

குறுகிய வட்டத்தில் ஓடும்
பலரது திட்டத்தின் அமைச்சரோ  -  கடிகார நேரம் 

அவன் படுத்தே தான் கிடப்பான்
தலை உடலில்லாது நம் தலைக்கு மேலே. -  வானம்

வெற்று‌ சபையில் 
வெற்றி பெற்றவனாய் ஒளிர்கிறான்  -  நட்சத்திரம் 

முகவரி இன்றி முகதுதி அமையும்
முகமாய் அவனுக் கெது அமைந்திடுதோ  -  ரசனை.

Comments

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

' முற்காலம், இக்காலம், எக்காலம் நற்காலம் '

இதயம்

மனைவி

ஒழுக்கம்

சாதி...

பிள்ளை