' திருத்தி வழி நடத்த ' ' துரத்தல் தவறில்லை '

நீ பெண்ணெனும் தீயானாய்
புகைப்பானாகி நின்றேன்
காற்றெனும் காதலில் கரைந்து 
வாழ்வை இழந்துவிட்டேன்

உள்ளே அழுகை எனக்காய் 
ஒரு ஆறுதலுரைக்கிறது
காமம் என்தன் கண்ணை 
கட்டி கூட்டிபோகிறது

இருட்டு உலகில் நடக்கு
குருட்டு மனம் துடிக்க - இருளின்
சாம்பல் நிறத்தொரு ஒளியில்
எனக்கும் வழிகிடைக்க

விழியை கட்டிய காமம்
அவ்விருளிலும் வழி கொடுக்க
எனை திருத்தி வழிநடத்த
எத்தவறும் எனை துரத்தி
வருவது தவறில்லை.

Comments

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

' முற்காலம், இக்காலம், எக்காலம் நற்காலம் '

இதயம்

மனைவி

ஒழுக்கம்

சாதி...

பிள்ளை