' திருத்தி வழி நடத்த ' ' துரத்தல் தவறில்லை '

நீ பெண்ணெனும் தீயானாய்
புகைப்பானாகி நின்றேன்
காற்றெனும் காதலில் கரைந்து 
வாழ்வை இழந்துவிட்டேன்

உள்ளே அழுகை எனக்காய் 
ஒரு ஆறுதலுரைக்கிறது
காமம் என்தன் கண்ணை 
கட்டி கூட்டிபோகிறது

இருட்டு உலகில் நடக்கு
குருட்டு மனம் துடிக்க - இருளின்
சாம்பல் நிறத்தொரு ஒளியில்
எனக்கும் வழிகிடைக்க

விழியை கட்டிய காமம்
அவ்விருளிலும் வழி கொடுக்க
எனை திருத்தி வழிநடத்த
எத்தவறும் எனை துரத்தி
வருவது தவறில்லை.

Comments

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

மனைவி

அவளன்பழகன்

' முற்காலம், இக்காலம், எக்காலம் நற்காலம் '

இதயம்

விடுதலை பறவை

சுனிதா வில்லியம்ஸ்