மழைக்கால தொடர் கதை

ஈரத் தென்றல் 
எனை மீறிச் செல்ல
இரவுச் சந்தன மேகங்கள்
பன்னீர்ப் போல 
சந்தக்கவிமழை தூவிச்செல்ல.
 
சிந்தித்து 
சூடாகிய மண்டையோட்டுக்கு
விடையானது மழையின் சுவடு - அதன்வழி
வந்த உள்ளக் குளிருக்கு 
உடையானது தேநீர்ச் சூடு.

அரைகுறை மூச்சிழுத்து 
பழகிய எனக்கு 
ஆழப் பெருமூச்சு 
அடிவயிற்றை தொட்டவுடன்
அங்கமெல்லாம் சிலுசிலுத்த
அக்கணத்தொரு ஒளித் திருடன் 
வெடியைப் பற்ற வைத்துப் பதுங்கியதும் 
வெடித்தவுடன் இடியாச்சு
இப்படியே இரவு கழிந்து 
கதிர் வராமலேயே
விடிஞ்சாச்சு....
இது மழைக்காலத் தொடர் கதையாச்சு.

Comments

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

மனைவி

அவளன்பழகன்

' முற்காலம், இக்காலம், எக்காலம் நற்காலம் '

இதயம்

விடுதலை பறவை

சுனிதா வில்லியம்ஸ்