இனி அவள்
காற்றோடு கதை பேசி
ஒளியோடு உறவாடினேன்
பாதையின் இருளில்
பயணம் செய்கையில்
வாலிப வரவில்
வருகிற காதலில்
வந்த தோல்வியைக்
கடந்து வாழ்கையில்
கரம் பிடித்தவள் - என்
மனம் பிடித்திட
படும் இடர்களை
தினம் நினைக்கையில்
பெரும் உளைச்சலை
தரும் என்செயல்
தவிர்த் துனக்கென
தலை யெடுக்கிறேன்
அன்புப் பயிரில் - என்
செயலால் விளைந்த
இடராய் இருக்கம்
களையைப் பறிக்கிறேன்
இனி(ய/அ)வளுக்காய்
என்னை அர்ப்பணிக்கிறேன்.
Comments